Advertisement

Thursday, May 19, 2016

கபாலியை தொடர்ந்து சூர்யா-கார்த்தியுடன் ரஞ்சித்…!

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கினாலும் ரஞ்சித் இயக்கினாலும், இன்று ரஜினியின் கபாலி டீசரால் உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளார்
எனவே கபாலியை அடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பது யார்? என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.
இதனையடுத்து சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஹரியின் சிங்கம் 3, மற்றும் சதுரங்க வேட்டை வினோத் ஆகிய இயக்குனர்களின் படங்களை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து மீண்டும் மெட்ராஸ் படத்தின் கூட்டணி இணையவுள்ளதாம். அதாவது மீண்டும் கார்த்தியை ரஞ்சித் இயக்குவார் என கூறப்படுகிறது.
காஷ்மோரா, மணிரத்னம் படங்களை அடுத்து கார்த்தி இதில் நடிப்பார் எனத் தெரிகிறது.

தேர்தலில் சரத்குமார் தோல்வி… ராதிகா என்ன சொன்னார்..?

தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார் போட்டியிட்டார்.
அவர் ஜெயலலிதா தலைமையிலான ஆளுங்கட்சி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார்.
இதுகுறித்து இவருடைய மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
‘நீங்கள் மீண்டும் எழுந்து நின்றால் அது தோல்வியல்ல. உங்களின் விடாமுயற்சி பெருமையாக உள்ளது. திருச்செந்தூர் மக்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்

இனி கெட்டப்பை மாற்றியே ஆகனும்… சூப்பர் ப்ளானில் விஜய்..!

நம் தலைமுடியின் ஸ்டைலை மாற்றினால், நம் முகமே மாறிவிட்டதாக தோன்றும். அப்படி ஒரு சிறப்பம்சம் நம் சிகை அலங்காரத்திற்கு உண்டு.
எனவே பெரும்பாலும் நடிகர்கள் இந்த டெக்னிக்கை மாற்றிக் கொண்டு வெவ்வேறு கெட்டப்புகளில் தோன்றுகின்றனர்.
ஆனால் விஜய்யை பொறுத்தவரை எப்போதும் ஒரே மாதிரியான சிகை அலங்காரத்துடன் நடிக்கிறார் என்பதே அது.
ப்ரண்ட்ஸ் மற்றும் தெறி படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் கூட முடியை ஒட்டவெட்டி சம்மர் கட்டிங் மட்டுமே செய்திருந்தார்.
இதற்கு விஜய்யின் தலைமுடி வளைந்து கொடுக்காத தன்மைதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எனவே பரதன் இயக்கத்தில் உருவாகவுள்ள இரண்டு விதமான கெட்டப்பில் ஒரு புதிய கெட்டப்பை முயற்சிக்க இருக்கிறாராம்.
இதற்காக வளைந்து கொடுக்கும் நெகிழ்வான தலைமுடியாக தன் முடியின் தன்மையை மாற்ற இருக்கிறாராம்.
எனவே, இந்த ஹேர் ட்ரீட்மெண்ட்டுக்காக விரைவில் வெளிநாடு செல்லக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது

மீண்டும் முதல்வர்..,, ஜெயலலிதாவுக்கு விஷால், பெப்சி வாழ்த்து…!

மே 16ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியானது.
எனவே தமிழகத்தின் முதல் அமைச்சராக மீண்டும் அரியணையில் ஏறுகிறார் ஜெயலலிதா.
எனவே நடிகர் சங்கத்தின் சார்பில் விஷால் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னிந்திய சினிமாவின் தொழிலாளர் அமைப்பான ஃபெப்சியும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதன் நிர்வாகிகள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து ஃபெப்சி விடுத்துள்ள அறிக்கையில்… “முதலமைச்சர் அம்மா அவர்களின் வெற்றியை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தொழிலாளர்களாகிய நாங்கள் மனசாரக் கொண்டாடுகிறோம்.
இந்த வரலாற்று சாதனைப் படைத்த அம்மாவை வாழ்த்தி செயற்குழுவில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

‘கயல்’ ஆனந்தியை கழட்டி விடாமல் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..


‘கயல்’ ஆனந்தியை கழட்டி விடாமல் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..!
தெலுங்கு படங்களில் அறிமுகமானாலும் கயல் படமே ஆனந்திக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கேரியரை உருவாக்கி தந்துள்ளது.
தற்போது தமிழில் பிஸியாக நடித்து வருகிறார்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் ஜோடி சேர்ந்தார்.
இதன் வெற்றியைத் தொடர்ந்து, எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்ற படத்திற்காக இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்து வருகிறது.
இதனால் இவர்களது ரசிகர்கள் இந்த ஜோடியை கொண்டாடி வருகின்றனர்
தற்போது மூன்றாவது முறையாக கடவுள் இருக்கான் குமாரு (KIK) என்ற படத்திற்காக இணைகின்றனர்.
ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக அவிகா கோர் நடித்து வந்தார்.
ஆனால் அவரது நடிப்பு திருப்தியில்லாத காரணத்தால், மீண்டும் ஆனந்திக்கே வாய்ப்பை வழங்கலாம் என நாயகன் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.