Advertisement

Thursday, June 19, 2014

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ பெயர் மாற்றம் ?

சிவகார்த்திகேயன் தற்போது தனுஷ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘டாணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தக் காலத்தில் போலீசாரை ‘டாணாகாரன்’ என்று சொல்லித்தான் அழைப்பார்கள்.
படத்தில் சிவகார்த்திகேயன் போலீசாக நடிப்பதால் ‘டாணா’ என பெயர் வைத்தார்கள். ஆனால், தற்போது படத்தின் பெயரை மாற்றிவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.
‘டாணா’ என்பது கொஞ்சம் கிண்டல், கேலி கலந்த வார்த்தையாகத்தான் அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. எனவே, படம் வெளிவரும் நேரத்தில் யாராவது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்களாம்.
அதோடு, வழக்கு ஏதாவது தொடர்ந்து விட்டால் அதன் பின் தேவையில்லாத

நடிகை பிரியங்காவை கன்னத்தில் அறைந்த களஞ்சியம்! மயங்கி விழுந்தார்-படப்பிடிப்பு ரத்து

இயக்குனர் களஞ்சியம் இயக்கும் ஊற்சுற்றி புராணம், அஞ்சலி பிரச்னையால் முடங்கிப்போனதால் இப்போது அவர் நடிக்க கிளம்பி விட்டார். லாரா, கோடைமழை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கோடைமழை படத்தின் படப்பிடிப்புகள் சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வருகிறது.

முத்தக்காட்சிக்கு தனி சம்பளம் வாங்கும் அலியா பட்!

பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களெல்லாம் நடுத்தர வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் 21 வயதாகும் ஆலியா பட் வேகமாக வளர்ந்து வருகிறார். இன்றைக்கு இருக்கும் டாப் ஹீரோயின்கள் பத்து படங்களுக்கு பிறகுதான் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்தார்கள்.
ஆனால் ஆலியா முதல் படத்திலிருந்தே லிப் லாக்

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்…! வாரஇதழ் கணிப்பு

பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் தங்களது டீமை அனுப்பி மக்களை ஓட்டளிக்க வைத்தது. அதோடு தபால் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவும் ஓட்டெடுப்பு நடத்தியது.
இந்த ஓட்டெடுப்பில் நேரடியாக 18 லட்சத்து 13 ஆயிரத்து 298 பேரும், தபால் மூலமாக 8 லட்சத்து 79 ஆயிரத்து 261 பேரும், இணையதளம் மூலம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 91 பேரும் என, மொத்தம் 34 லட்சத்து 98 ஆயிரத்து 650 பேர்

இன்னும் நான் 10 லட்சத்தை கூட முழுசா பார்க்கல! -சரண்யாமோகன் புலம்பல்

தனுஷ்-நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன். அக்காவின் காதலரான தனுஷை ஒருதலையாக காதலிப்பது போல் சிறப்பாக நடித்திருந்தார் சரண்யாமோகன்.
அதன்காரணமாக, அதையடுத்து தான் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவரை கதாநாயகி ஆக்கினார் சுசீந்திரன். அப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்த சரண்யாமோகன் அதன்பிறகு அதே சுசீந்திரன் இயக்கிய அழகர் சாமியின் குதிரை படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியாகவும் நடித்தார்.

சுந்தர்.சியுடன் ஹாட்ரிக் அடிக்கிறார் ஹன்சிகா!

ஹன்சிகா, சுந்தர்.சி இயக்கிய, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் அவருடன் இணைந்தார். தற்போது அரண்மனை படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சுந்தர்.சி. விஷால் ஹீரோவாக நடிக்க ஒரு படம் இயக்க இருக்கிறார்.
இதில் விஷால் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சுந்தர்.சியுடன் ஹாட்ரிக் அடிக்கப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா. “சுந்தர்.சியுடன் மூன்றாவது

தெலுங்கானா, சீமாந்திராவில் 350 தியேட்டர்களில் நான் சிகப்பு மனிதன் வெளியீடு

விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் தமிழில் வெளியாகும் அதே நாளில் இந்துருடு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக இருந்தது. அந்த திட்டத்தில்தான் தமிழில் டப்பிங் பணிகள் நடைபெற்றபோதே தெலுங்குப் பதிப்புக்கான பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்றன.
ஆனால் திட்டமிட்டபடி நான் சிகப்பு மனிதன் படம் தமிழில் வெளியான அதே நாளில் இந்துருடு படத்தை தெலுங்கில் வெளியிட முடியவில்லை.
இது பற்றி அப்போது விஷாலிடம் கேட்டபோது, இரண்டு

‘அஞ்சான்’ – படத்தில் கிளாமர்…சமந்தாவுக்கு பிரச்சனை…!

‘அஞ்சான்’ படத்தில் நாயகியாக நடிக்கும் சமந்தா அந்த படத்தில் படு கிளாமராக நடித்து வருகிறாராம். குறிப்பாக பாடல் காட்சிகளில் தாராளமாய் நடிக்கிறார் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து பெரிய நாயகர்களுடன் நடிப்பதால் கொஞ்சம் தாராளமாகவே நடித்து தமிழிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறாராம்.
இங்கு ‘அஞ்சான்’ படத்தில் சமந்தா கிளாமராக நடிப்பது அவருக்கு ஆந்திராவில் ஒரு பிரச்சனையைக் கிளப்பி விட்டிருக்கிறது. இங்க இடி இடிச்சால் அங்க ஏன் மழை பெய்யுதன்னுதானே கேக்கறீங்க, விஷயம் இருக்கு.
சில மாதங்களுக்கு முன் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபு ‘ 1 நேநொக்கடைன்’ என்ற படம் வெளிவந்தது. அந்த

சண்டமாருதத்திலிருந்து அவ்னி மோடிக்கு பதில் ஓவியா நடிக்கிறார்

சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் சண்டமாருதம். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். மேஜிக் பிரேமுடன் இணைந்து ராதிகா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சரத்குமாருடன் அவ்னிமோடி, சரயு என்ற இரு ஹீரோயின்கள் நடிப்பதாக இருந்தது. தற்போது அவ்னிமோடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓவியா நடிக்க இருப்பதாக பட வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

தனுஷை அதிர்ச்சியடைய செய்த டாணா!

சிவகார்த்திகேயனை 3 படத்தில் காமெடியனாக சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு கொண்டு வந்தவர் தனுஷ். அதோடு அதையடுத்து தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைத்தவர், இப்போது டாணா என்ற படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
முன்னதாக, தனது தயாரிப்பில் வேலையில்லா பட்டதாரி என்ற படத்திலும் தற்போது நடித்து

Wednesday, June 18, 2014

முண்டாசுப்பட்டி

குறும்படங்களை  முழுநீளப் படமாக தயாரித்து வெற்றிக்கண்டு வரும் சி.வி.குமார், தயாரித்துள்ள மேலும் ஒரு குறும்படமாக இருந்த முழுநீளப் படமாக வளர்ந்த படம் தான் இந்த 'முண்டாசுப்பட்டி'.

புகைப்படம் எடுத்துக்கொண்டால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கை கொண்ட கிராமம் தான் முண்டாசுப்பட்டி. இதற்காக அந்த ஊரில் உள்ள யாரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், மரணம் அடைந்த பிறகு

நான்தான் பாலா



இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த விவேக், கதையின் நாயகனாக, அதுவும், காமெடி அற்ற நாயகனாக நடித்துள்ள படம் தான் 'நான்தான் பாலா'.

கும்பகோண பெருமாள் கோவிலில் பூசாரியாக இருக்கும் விவேக்கிற்கு, காஞ்சிபுரத்தில் உள்ள கூலிக்கு கொலை செய்யும் பூச்சி என்ற ரவுடி உதவி செய்கிறார்.

என்னை யாரும் தொடர்பு கொள்ளா வேண்டாம் : குஷ்பு வேண்டுகோள்

திமுக-வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, அடுத்ததாக பா.ஜ.க-வில் இணையப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ள குஷ்பு, இது குறித்து டிவிட்டர் இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சில நேரங்களில் கஷ்டமான முடிவுகளையும் புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் அதைத்தான் தற்போது செய்துள்ளேன். வாழ்க்கையில் எல்லா மேடு பள்ளங்களையும் நான் கடந்துவந்துள்ளேன். என் மீது அன்பு கொண்டவர்களின்

கோடம்பாக்கத்திற்கு கிடைத்துள்ள புதிய சினேகா


காதல் பஞ்சாயத்து, காதல் 2014 ஆகியப் படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் நேகா. இவர் பார்ப்பதற்கு சினேகா போல இருப்பதாக கோடம்பாக்கத்தினர் கூறிவருகின்றனர்.

புதுமுகங்கள் ஆதர்ஷ் - ஜீவிகா நடிக்கும் 'காதல் பைத்தியம்'

அம்மா பிலிம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு 'காதல் பைத்தியம்' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தின் கதாநாயகனாக ஆதர்ஷ் என்ற நடிகர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இவர் ஹிந்தியில் 'ஏ தில் ராம்தா ஜோகி'” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஜீவிகா நடிக்கிறார். இவர் கன்னடத்தில் 'பிரம்மா விஷ்ணு மகேஷ்வரா' என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மற்றும் ஆடுகளம் நரேன்,ஒய்.ஜி.மகேந்திரன், பிரியா, ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஹரீஷ்-நேகா நடிக்கும் 'காதல் 2014'

சரவணா பிலிம் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராம்சங்கர், ஆர்.எல்.ஏசுதாஸ்,ஆர்.ஒய்.சஜீத் ஆகியொர் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு 'காதல்2014' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் 'முத்துக்கு முத்தாக', 'கோரிப்பாளையம்', 'மாத்தியோசி' படங்களில் நடித்த ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமான மணிகண்டன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் வில்லனாக

ஒரே படத்தை நான்கு மொழிகளில் தயாரிக்கும் தியாகராஜன்

தமிழக ரசிகர்களுக்கு மலையூர் மம்பட்டியானாக அறியப்பட்ட நடிகர் தியாகராஜன், தற்போது தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் வலம் வருகிறார். தனது மகன் பிரசாந்தை வைத்து, மலையூர் மம்பட்டியான் படத்தை 'மம்பட்டியான்' என்ற தலைப்பில் ரீமேக் செய்த இவர், தற்போது இந்திப் படம் ஒன்றை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்ய உள்ளார்.

ரசிகர்களை திருப்திப்படுத்த காலதாமதம் தேவை - இயக்குநர் பிரபு சாலமன்

'கயல்' படத்தின் இறுதிக்கட்ட பணியில் பிஸியாக இயங்கிக்கொண்டிருக்கும் இயக்குநர் பிரபுசாலம், தனது படம் குறித்து நம்மிடையே சிலவற்றை பகிர்ந்துகொண்டார்.

கும்கி வெளியாகி பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டதே! இவ்வளவு பெரிய இடைவெளி தேவையா?

நல்ல தரமான படைப்பு வர வேண்டுமானால் இடைவெளி தேவைதான். மைனா வெற்றிக்கு பிறகு கும்கிக்கு ஒரு இடைவெளி இருந்தது. அதற்க்கு காரணமே அடுத்து என்ன மாதிரியான கதையை தேர்ந்தெடுப்பது? என்கிற யோசனையில் சில காலம்.

மைனாவைப் பற்றிய சிந்தனைகளை மனதிலிருந்து சுத்தமாக

ஜூலை மாதம் வெளியாகும் 'நளனும் நந்தினியும்' - நம்பலாமா!

வெளிநாட்டில் வேலை செய்து பெரும் தொகை சம்பாதித்த சிலர், அவ்வபோது தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து பரபரப்பு ஏற்படுத்துவதும், பிறகு கையை சுட்டுக்கொண்டு அவர்கள் பறந்துவிடுவதும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில், ஐ.நா சபையில் முக்கிய பணியில் இருந்த ரவீந்தர் சந்திரசேகரன், லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல படங்களை தயாரித்து வந்தார். இவர் பிரஸ் மீட் வைத்தாலே, ஒரு படத்திற்கு வைக்க மாட்டார். மூன்று, நான்கு, ஐந்து என்று கொத்து கொத்தாக படங்களுக்கு பிரஸ் மீட் வைப்பார்.

'சிவப்பு' படத்தை வாங்கி வெளியிடும் ராஜ்கிரண்

சினிமாவில் வினியோகஸ்தராக அறிமுகமாகி, பிறகு தயாரிப்பாளராக வெற்றிப் பெற்று, இயக்குநர் மற்றும் ஹீரோ என்று வெற்றிக்கொடி நாட்டிய ராஜ்கிரண், பிறகு பணத்தை இழந்து கஷ்ட்டப்பட்டுக்கொண்டிருந்தார் என்பதை அனைவரும் அறிவர்.

பிறகு, குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த ராஜ்கிரண், தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா நடிகராக உள்ளார்.

இதற்கிடையில், 'கழுகு' என்ற படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ள படம் 'சிவப்பு'. இப்படத்தில் நவீன்சந்திரா நாயகனாகவும், ரூபா மஞ்சரி நாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Tuesday, June 17, 2014

வாழும் தெய்வம் – திரை விமர்சனம்


அமராவதி குடியிருப்பில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கிறது. ராதாரவி வீட்டில் அவரது மகன் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் ஊரை சுற்றி பொழுதை கழிக்கிறார். இதற்கிடையில் ஒரு பெண்ணையும் காதலிக்கிறார். இந்த காதல் ஒரு கட்டத்தில் ராதாரவிக்கு தெரியவருகிறது.
மகனை கண்டிக்காமல் அவனது காதலை சேர்த்துவைப்பதாக உறுதி கூறுகிறார். அதற்காக, மகன் காதலிக்கும் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்கிறார். ஆனால்,

முண்டாசுப்பட்டி டீமுக்கு ரஜினி பாராட்டு

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டூடியோ இணைந்து தயாரித்திருக்கும், ‘முண்டாசுப்பட்டி’ படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. விஷ்ணு, நந்திதா, காளி, ராமதாஸ் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தயாரிப்பு நிறுவனத்தினர் போட்டுக் காட்டினர்.

விஜய்-அஜீத்தை இணைத்து படமெடுக்க தயாராகும் அரசியல்வாதி!

விஜய்-அஜீத் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதில் விஜய் ஹீரோவாகவும், அஜீத் செகண்ட் ஹீரோவாகவும் நடித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு அவர்கள் இணையவில்லை. இரண்டு பேருமே தங்களுக்கென ஒரு பாணியில் ஹீரோ இமேஜை உருவாக்கிக்கொண்டனர்.
இதற்கிடையில், ரஜினி-கமலை மீண்டும் இணைத்து படமெடுக்க முயற்சிகள் நடந்தது போல், விஜய்-அஜீத்தை இணைக்கவும் முயற்சிகள்

அனிருத்துக்கு கருணை காட்டும் ரஜினி!

டைரக்டர் ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் நடித்த 3 படத்தில் அறிமுகமானவர் அனிருத். லதா ரஜினியின் உறவினர் என்பதால் தான் அனிருத்துக்கு அந்த வாய்ப்பு எளிதாக கிடைத்தது. அதை அவரும் அற்புதமாக பயன்படுத்திக்கொண்டார். ஒய்திஸ் கொலவெறி… என்ற பாடல் கடல் கடந்தும் பல நாடுகளில் ஒலித்தது.
அதனால், அப்போது அனிருத்தை அழைத்து வாழ்த்தினார் ரஜினி. அதனால் அவரது வாழ்த்து கொடுத்து உற்சாகத்தோடு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை,

கத்தி படப்பிடிப்பு முடிந்தது! யூனிட்டுக்கு விருந்து கொடுத்தார் விஜய்!!

‘துப்பாக்கி’யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வந்த படம் ”கத்தி”. இரண்டு வேடங்களில் அவர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்தது.
இந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 40 நாட்களாக சென்னையில் நடந்து வந்ததோடு, கடைசி நாளன்று பூசணிக்காயும் உடைத்தனர்.
இதையடுத்து, சமீபகாலமாக தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் அப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் விருந்து கொடுப்பதை கடைபிடித்து வரும் விஜய்,

சிவகார்த்திகேயனை அப்ஸெட்டாக்கிய தனுஷ்!

சிவகார்த்திகேயன் நடிக்க கற்றுக் கொண்டாரோ இல்லையோ…மார்க்கெட்டிங் பற்றி தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் தன்னையும், தன் படத்தையும் எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்ளடும் என்று தயாரிப்பாளர் தரப்பிடம் முன்கூட்டியே தெளிவாக சொல்லிவிடுகிறார்.
தான் நடித்த படம் வெளியாகும் அன்று முன்னணி நாளிதழ்களில் குறிப்பாக ஆங்கில நாளிதழ்களில், முமுழுப்பக்க விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பதும் சிவகார்த்திகேயனின் முக்கியமான கண்டிஷன்.

தமிழில் ரிலீசாகிறது டிரான்ஸ்பார்மர்ஸ்

புகழ்பெற்ற ஹாலிவுட் படமான டிரான்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்டின்க்ஸன் வருகிற 27ந் தேதி ரிலீசாகிறது. இது டிரான்ஸ்பார்மார் பட வரிசையில் 4 வது பாகமாகும். இதற்கு முந்தைய 3 பாகங்களிலும் நடித்த மனித கேரக்டர்கள் எதுவும் இதில் கிடையாது. எல்லாமே புதுமுகங்கள்தான். பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் ஹீரோ.

புதுமுக இயக்குனரின் திகில் படத்தில் நயன்தாரா!

நயன்தாரா தற்போது தமிழ் படங்களில் முழுவீச்சில் நடித்து வருகிறார். உதய நிதி ஸ்டாலினுடன் ‘நண்பேன்டா’, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, ஜெயம்ரவியுடன் ‘தனி ஒருவன்’ படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘பூச்சாண்டி’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த நிலையில், தற்போது புதுமுக இயக்குனர் அஸ்வின் என்பவர் இயக்கும் திகில் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

முண்டாசுபட்டி 4 நாளில் 4 கோடி வசூல்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

கடந்த வெள்ளிக்கிழமை (ஜுன் 13)ந் தேதி வெளிவந்தது முண்டாசுப்பட்டி. குறும்படமாக இருந்ததை சினிமாவாக்கினார் அதன் இயக்குனர் ராம்குமார். திருக்குமரன் எண்டர்டெய்ன்ட்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவும் இணைந்து தயாரித்தது.
சி.வி.குமார் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி படங்கள் வெற்றி பெற்றது. பீட்சா 2 மட்டும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. சி.வி.குமாரின் படங்களிலேயே

ஓட்டம் ஆரம்பம் – திரை விமர்சனம்

படத்தின் நாயகி எழிலும், அவரது முறைமாமான சண்முகமும் காதலித்து வருகின்றனர். சண்முகம் போலியோ நோயால் ஒரு காலை இழந்தவர்.
இவர்கள் காதலுக்கு சண்முகத்தின் அப்பா ஆதரவாக இருக்கிறார். அதன்படி, நாயகியின் அப்பாவிடம் சென்று பெண் கேட்கிறார். ஆனால், நாயகியின் அப்பாவோ சண்முகத்தின் கால் ஊனத்தை வைத்து அவருக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்.
இதையடுத்து இருவரும் வீட்டைவிட்டு ஓடிச்சென்று பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். பதிவு திருமணம்

Monday, June 16, 2014

விமான நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட பிரகாஷ்ராஜ்

டெல்லி விமான நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், பயணி ஒருவருடன் மோதலில் ஈடுபட்டதால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து சென்னைக்கு வருவதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பிரகாஷ்ராஜ், ஏர் இந்தியா கவுண்டரில், பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, வரிசையில் நின்ற மற்றொரு பயணி பிரகாஷ்ராஜை

கார்த்திக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்

குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள லட்சுமி மேனன், கார்த்தியுடன் ஜோடி சேருகிறார்.

தற்பொது அட்ட கத்தி ரஞ்சித் இயக்கத்தில் 'மெட்ராஸ்' படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக 'கொம்பன்' என்ற படத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் மணிவண்ணனை அவமானப்படுத்திய பார்த்திபன் - தயாரிப்பாளர் கோபம்

மறைந்த நடிகரும், இயக்குநருமான மணிவண்ணனை, இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் அவமானப்படுத்தி விட்டார் என்று, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். இவர் மணிவண்ணன் இறுதியாக இயக்கிய 'ராஜராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ' (அமைதிப்படை-2) படத்தை தயாரித்தவர். தற்போது கங்காரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் இவர், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறைந்த அய்யா மணிவண்ணன் அவர்கள் இயக்கிய நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ  (அமைதிப்படை இரண்டாம் பாகம்) படத்தின் எடிட்டராக சுதர்சன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது கிரீன் பார்க்கில்

'திருமணம் எனும் நிக்காஹ்' படத்திற்கு தடை கோரி வழக்கு

ஜெய், நஸ்ரியா நடித்துள்ள 'திருமணம் எனும் நிக்காஹ்' படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபப்ட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணைத் தலைவர் டேப்லெஸ் அலிகான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொது மக்களை மிரட்டிய படக்குழுவினர் - காவல்துறை கண்டிப்பு

விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் 'பூஜை'. இயக்குநர் ஹரி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆனைமலை ஆழியாற்றங்கரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் விஷால் காரில் மற்றொரு காரை முந்திச்செல்வது போன்று காட்சி

சினிமா பிரபலங்கள் விளையாடும் பேட்மிண்டன் போட்டி

சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விளையாடும் பேட்மிண்டன் போட்டி 'இந்தியன் பேட்மிண்டன் செலிபிரிட்டி லீக்' (Indian Badminton Celebrity League) என்ற பெயரில் நடைபெற உள்ளது.

சினிமா நட்சத்திரங்கள் நடிப்பது மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மட்டும் இன்றி, தற்போது விளையாட்டுகள் மீதும் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்கள். அந்த வகையில், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் என்ற பெயரில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் கடந்த நான்கு வருடங்களாக விளையாடி வருகிறார்கள்.

ஜெட் விமானத்தில் பறந்த இலியானா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது பாலிவுட்டில் தனது முன்னணி கொடியை நாட்ட பாடுபட்டுக்கொண்டிருக்கும் நடிகை இலியானாவுக்கு ஜெட் விமானத்தில் பறப்பது என்பது நீண்ட நாள் கனவாம். இந்த கனவுக்காக காத்திருந்த அவர் தற்போது அனை நினைவாக்கியுள்ளார்.

பாலியல் வன்முறைக்கு எதிராக உருவாகியுள்ள 'சிட்டுக்குருவி'

பூமி மாசு பட்டு வருவது குறித்து ‘முத்தமிடும் பூமி’, மழைநீர் சேகரிப்பு குறித்து ‘விரலை நனைத்த மழைத்துளி’, என்று இரண்டு படைப்புகளை  உருவாக்கிய விஜய் ஆர்.ஆர் தற்போது இயக்கியுள்ள ஆல்பம் ‘சிட்டுக்குருவி’.

‘மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் சிட்டுக்குருவி. தற்போது இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள், பெண்களையும் அந்த சிட்டுக்குருவிகளை  போல இல்லாமல் செய்துவிடுமோ என்கிற

ஜெயம் ரவியின் குத்துப் பாட்டுக்காக ரூ.1 கோடியில் செட்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி இரண்டாவது முறையாக ஜோடியாகியுள்ள இப்படத்தில், மற்றொரு நாயகியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். இவர்களுடன் வி.டி.வி.கணேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

முஸ்லீம் மதத்திற்கு மாறிய முன்னணி நடிகை - நடிப்பதை கைவிடுகிறார்

முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். மதத்திற்கு மாறியது மட்டும் இன்றி, இனி திரைப்படங்களில் தான் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 'அழகி' படத்தின் மூலம் நாயகியான மோனிகா, சண்டைக்கோழி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, பகவதி, இனிது இனிது காதல் இனிது, தாஸ், தொடக்கம், முத்துக்கு முத்தாக, மஞ்சபுரம், வர்மம், அகராதி என்று 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹோம்லியாக நடித்து வந்த இவர், 'சிலந்தி' என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து கோடம்பாக்கத்தையே அதிர வைத்தார். சிவப்பு கலர் புடவையில் இவர் காட்டிய அந்த கவர்ச்சிக்காக, மோனிகாவை தயாரிப்பாளர்கள் மொய்க்க, அம்மனியோ கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று

லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி

பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தனது 27வது படத்தை இன்று ஆரம்பித்தது. ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். இவர் தலைநகர், மருதமலை, மாப்பிள்ளை, படிக்காதன் ஆகியப் படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் தொடக்க விழா இன்று பூஜையுடன் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, சூரி, அஸ்வின், ஜெயம் ரவியின் தந்தையும், தயாரிப்பாளருமான

நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன் - தமன்னா

தமிழில் முன்னணி நடிகையாக, பல ஹிட் படங்களில் நடித்து வந்த தமன்னா, திடீரென்று தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துக்கு ஜோடியாக வீரம் படத்தில் தமன்னா நடித்தார். இதற்கிடையில் இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, தமிழில் அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார்.

எழுதி சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு கிடையாது - இளையராஜா

எழுதி சாதிக்க வேண்டுமென்றோ, பிற விஷயங்களில் கவனம் செலுத்தி சாதிக்கவேண்டுமென்ற எண்ணமும் எனக்கு இல்லை, என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா நாளை (ஜூன் 3) தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக, குமுதம் பத்திரிகையும், இளையராஜா பேன்ஸ் கிளப் அமைப்பும் இணைந்து இன்று (ஜூன் 2) இளையராஜாவின் பிறந்தநாள் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இவ்விழாவில், இயக்குநர்கள் பஞ்சு அருணாச்சலம், பாலா, சுகா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு, மலேசிய கூட்டணியில் உருவாகும் 'முத்துகுமார் வாண்டட்'

திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் நாயகி, முத்துகுமாரை தேடி மலேசியா செல்கிறாள். இந்த முத்துக்குமாருக்கும் நாயகிக்கும் காதல் ஏதும் இல்லை, இருவரும் முன்பின் சந்தித்ததும் இல்லை, பிறகு எதற்காக நாயகி முத்துகுமாரை தேடி செல்கிறாள். இந்த முத்துக்குமார் யார், இந்த முத்துகுமாரை மலேசியாவில் சந்தித்தாளா, அவளுக்கு திருமணம் நடைபெற்றதா என்பதை திரில்லர் மற்றும் காதல் கதையாக இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

புதுமுகங்கள் நடிக்கும் 'சில்லுன்னு ஒரு பயணம்'

ஜி.என்.மீடியாஸ் ஸ்ரீநி சினி கம்பைன்ஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் படம் 'சில்லுன்னு ஒரு பயணம்'. ஜி.என்.நரசிம்மன் தயாரிக்கும் இப்படத்தில் நாயாகனாக சோஹைப் அறிமுகமாகிறார். கதாநாயகியாக நவ்யா நடிக்கிறார்.

இவர்களுடன் தயாரிப்பாளர் நரசிம்மன் முக்கிய வேடத்தில் நடிக்க, இணை நாயகனாக விஷ்வா மற்றும் செல்லத்துரை, செந்தில்,

மதுரையைப் பற்றி சொல்லும் 'மதுரக்காரங்கே'

சபரி மலை சாஸ்தா கிரியேஷன்ஸ் எனும்  புதிய நிறுவனம் தயாரிக்கும் 'மதுரக்காரங்கே' என்கிற புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளது.

பாசத்தின் காரணமாக ஐந்து நண்பர்கள் ஏரியா தாதாவிடம் சேர்த்து ஆயுதம் என்றால் என்னவென்று தெரியாமல் ஆயுதத்தை தூக்கி கொலை, கொள்ளை போன்ற வேளைகளில் ஈடுபடுகிறார்கள் .ஒருகட்டத்தில் தவறான பாதையில் இருந்து விலகி திருந்த நினைக்கிறார்கள் .ஆத்திரமடைந்த

சினிமாவில் சங்கங்களே இருக்க கூடாது - பாரதிராஜா காட்டம்

 தயாரிப்பாளர் கே.ராஜனின், தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழகம் மற்றும் பத்திரிகையாளர் குரல் வார இதழ் இணைந்து, தேசிய விருது பெற்ற தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடத்தியது.

சென்னையில் நடைபெற்ற இவ்விழாவில் இயக்குனர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு தேசிய விருது பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு விருது வழங்கி கெளரவித்தார். மேலும், மறைந்த

சமஸ்கிருதம் கற்றுக்கொண்ட விவேக்

காமெடி நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'நாந்தான் பாலா. இப்படத்தை கண்ணன் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

மும்பையில் வீடு வாங்கினார் ஸ்ருதி ஹாசன்

இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், மும்பையில் தான் தங்குகிறார். மும்பை பந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு இருந்தார்.

வாடகை வீட்டில் தங்கி இருந்த போது கடந்த வருடம் நவம்பர் மாதம் ஸ்ருதிஹாசன் மீது தாக்குதல் நடந்தது. மர்ம மனிதன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து ஸ்ருதிஹாசனை தாக்கினான். பிறகு போலீசார் தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

அரசியலில் குதிக்கும் கோவை சரளா!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் குறைவு தான் என்றாலும், அந்த குறைவிலேயே முக்கியமானவர் கோவை சரளா. பல வெற்றிப் படங்களில், பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துள்ள கோவை சரளா, தற்போது அரசியல்வாதியாகியுள்ளார். ஆனால், இது நிஜத்தில் அல்ல ஒரு படத்தில்.

வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் பிலிம்ஸ் மற்றும் விஸ்டம் பிலிம்ஸ் பிரைவேட்