Advertisement

Saturday, June 14, 2014

அதிரடி ஆக்ஷ்ன் படமாக வளரும் ஜெயம் ராஜா- ஜெயம் ரவியின் படம்!

தனது தம்பி ஜெயம்ரவியை நாயகனாகக்கொண்டு ஜெயம் படத்தை முதலில் இயக்கிய ஜெயம் ராஜா, அதையடுத்து எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி ஆகிய படங்களை இயக்கியவர், தற்போது ஆறாவதாக தனி ஒருவன் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
அப்படி அவர்கள் இருவரும் இணைந்த அனைத்து படங்களுமே ஹிட்தான். ஆனால், பின்னர் விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்குவதற்காக ராஜா ட்ராக்கே மாற்றியபோது,
ஜெயம்ரவியும் மற்ற இயக்குனர்களிடம் கதை கேட்டு தானும் ட்ராக்கை மாற்றிக்கொண்டார். அதையடுத்து, மீண்டும் தம்பிக்கான ஸ்கிரிப்டுடன் டைரக்டர் ராஜா தயாரானபோது அவர் பிசியாக இருந்தார்.
அதனால், இரண்டரை ஆண்டுகளாக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தவர், என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்திலும் நடித்தார். இந்தநிலையில், கைவசமிருந்த படங்களை முடித்து விட்ட ஜெயம்ரவி, மீண்டும் கால்சீட் கொடுத்ததை அடுத்து, ‘தனி ஒருவன்’ என்ற அந்த படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் ராஜா.
இதுவரை தனது படங்களில் காதல் மற்றும் காமெடி, செண்டிமென்டுக்கு முன்னுரிமை கொடுத்த ராஜா, இந்த படத்தில் விஜய்யை இயக்கிய வேலாயுதம் படத்தைப்போலவே ஆக்சனை தூக்கலாக வைத்துள்ளாராம். ஜெயம்ரவி மட்டுமின்றி, நயன்தாராவும் ஆக்ஷன் வேடத்தில் நடிப்பதால், தனி ஒருவன் அதிரடி ஆக்சன் படமாக வளர்ந்து கொண்டிருக்கிறதாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...