Advertisement

Thursday, June 19, 2014

சுந்தர்.சியுடன் ஹாட்ரிக் அடிக்கிறார் ஹன்சிகா!

ஹன்சிகா, சுந்தர்.சி இயக்கிய, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் அவருடன் இணைந்தார். தற்போது அரண்மனை படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சுந்தர்.சி. விஷால் ஹீரோவாக நடிக்க ஒரு படம் இயக்க இருக்கிறார்.
இதில் விஷால் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சுந்தர்.சியுடன் ஹாட்ரிக் அடிக்கப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா. “சுந்தர்.சியுடன் மூன்றாவது
படத்தில் நடிக்கிறேன். விஷால் ஹீரோ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்கிறார் ஹன்சிகா.
“இது வழக்கமான சுந்தர்.சியின் காமெடி படம் இல்லை. வித்தியாசமான ஆக்ஷன் படம். ஹன்சிகாவுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அழுத்தமான கேரக்டர், ஹன்சிகா, சுந்தர்.சி, குஷ்பு இடையே தீயா வேலை செய்யணும் குமாரு படத்திலிருந்தே நல்ல நட்பு இருக்கிறது.
ஹன்சிகா குஷ்புவிடம்தான் தனிப்பட்ட விஷயங்களுக்கே ஆலோசனை கேட்கிறார். அவர்களது நட்பால்தான் இது தொடர்கிறது” என்கிறார்கள் சுந்தர்.சிக்கு நெருக்கமான நண்பர்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...