Advertisement

Thursday, June 19, 2014

இன்னும் நான் 10 லட்சத்தை கூட முழுசா பார்க்கல! -சரண்யாமோகன் புலம்பல்

தனுஷ்-நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர் சரண்யா மோகன். அக்காவின் காதலரான தனுஷை ஒருதலையாக காதலிப்பது போல் சிறப்பாக நடித்திருந்தார் சரண்யாமோகன்.
அதன்காரணமாக, அதையடுத்து தான் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவரை கதாநாயகி ஆக்கினார் சுசீந்திரன். அப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்த சரண்யாமோகன் அதன்பிறகு அதே சுசீந்திரன் இயக்கிய அழகர் சாமியின் குதிரை படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியாகவும் நடித்தார்.

ஆனால், அவர் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதோடு, அதையடுத்து பல படங்களில் நடித்தும் சரண்யாமோகனின் மார்க்கெட் மட்டும் அப்படியே இருக்கிறது. அவருக்குப்பிறகு வந்த லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகளெல்லாம் 50 லட்சம், ஒரு கோடி என்று சம்பளம் வாங்கிக்கொண்டிருக்க இவர் மட்டும், இன்னமும் சில லட்சங்களிலேயே நின்று கொண்டிருக்கிறார்.
இதுபற்றி சரண்யா மோகனைக்கேட்டால், நடிப்புக்காக எந்த தியாகமும் செய்ய நான் தயார். அதேசமயம், கிளாமராக மட்டும் என்னால் நடிக்க முடியாது.
மற்றபடி நடிப்பில் யாருக்கும் நான் குறைந்தவள் அல்ல. ஆனபோதும், என்னை இன்னும் புதுமுக நடிகைகள் போன்றே சினிமா உலகம் பார்க்கிறது. சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் நான் 10 லட்சத்தைகூட முழுசாக பார்க்கவில்லை. அதுதான் வேதனையாக உள்ளது என்கிறார் சரண்யாமோகன்.
ஆனால், நல்ல அழகான திறமையான நடிகை சரண்யாமோகன் அவரை எதற்காக இப்படி ஓரங்கட்டுகிறார்கள் என்று சினிமா வட்டாரங்களில் விசாரித்தால், திறமையான நடிகைதான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் குள்ளமான நடிகையாக இருக்கிறாரே அதுதான் அவருக்கு பெரிய பிரச்னையே என்கிறார்கள். மேலும், எந்தவொரு ஹீரோவுக்கும் அவர் பொருந்தமாட்டார். ஒரு ஷாifடைகூட ஹீரோவுடன் அவரை நிறுத்தி எடுக்க முடியாது. காரணம், அவர்களின் இடுப்புக்குதான் இவர் இருப்பார்.
அதனால் நெருக்கமான காட்சிகளை குளோசப் ஷாட்டாக வைத்து, அப்போது சரண்யாமோகனை ஸ்டூலில் நிற்க வைத்துதான் படமாக்க வேண்டியுள்ளது. அதனால்தான் அவரது உயரம் மாதிரியே அவரது மார்க்கெட்டும் வளர்சசியே இல்லாமல் இருக்கிறது என்கிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...