Advertisement

Monday, June 16, 2014

அரசியல் டூ ஆன்மீகம் - நடிகையின் புது அவதாரம்

பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த திவ்ய ஸ்பந்தனா, கன்னட திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். இதற்கிடையில் திடீரென்று அரசியலில் குத்த அவர், கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி-ஆனார்.


இந்த வெற்றியைத் தொடர்ந்து அரசியலில் தீவிரம் காட்ட தொடங்கிய அவர், சினிமா வாய்ப்புகளை நிராகரித்து வந்தார். இதற்கிடையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில், மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திவ்யா தோல்வியடைந்தார்.

இந்த தோல்வியால் துவண்டுப் போன திவ்யா, தற்போது ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ள ஆரம்பித்துள்ளார்.
மும்பையில் உள்ள பிரபல விபாசனா தியான மையத்துக்கு சென்று பத்து நாட்கள் தங்கி, அங்கு தொடர்ச்சியாக தியானம் செய்தவர், யாரிடமும் பேசாமல் மெளன விரதத்தையும் முடித்துவிட்டு, தற்போது மீண்டும் கர்நாடகத்திற்கு வந்துள்ளார்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...