தமிழ், மலையாள சினிமாவில் நடித்து வருபவர் இனியா. தமிழில் முன்னணி நடிகையாக
உள்ள இவர் 'வாகை சூட வா', 'மெளனகுரு', 'சென்னையில் ஒருநாள்', 'நான்
சிகப்பு மனிதன்' ஆகியப் படங்களில் நடித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், சில நாட்களாக படப்பிடிப்பு இல்லாததால் குடும்பத்தினருடன் வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய சகோதரிக்கு விரைவில் திருமணம் என்பதால்,
புதிய தங்க நகைகளை வாங்கி வீட்டில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த தியேட்டர் ஒன்றுக்கு இனியாவும், குடும்பத்தினரும் இரவு காட்சி படம் பார்க்க சென்றனர். வீட்டை பூட்டி விட்டு சென்று இருந்தார்கள். படம் முடிந்து வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளைபோய் இருந்தது. ரூ.5 லட்சம் ரொக்க பணத்தையும், பத்து பவுன் நகைகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்று இருந்தனர். இதனால் இனியாவும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இதுகுறித்து இனியாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், சில நாட்களாக படப்பிடிப்பு இல்லாததால் குடும்பத்தினருடன் வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய சகோதரிக்கு விரைவில் திருமணம் என்பதால்,
புதிய தங்க நகைகளை வாங்கி வீட்டில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த தியேட்டர் ஒன்றுக்கு இனியாவும், குடும்பத்தினரும் இரவு காட்சி படம் பார்க்க சென்றனர். வீட்டை பூட்டி விட்டு சென்று இருந்தார்கள். படம் முடிந்து வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் கொள்ளைபோய் இருந்தது. ரூ.5 லட்சம் ரொக்க பணத்தையும், பத்து பவுன் நகைகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்று இருந்தனர். இதனால் இனியாவும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இதுகுறித்து இனியாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...