Advertisement

Sunday, June 15, 2014

ஓவியா இருந்தால் பயமே..!

யாமிருக்க பயமே படத்தில் ரூபா மஞ்சரி கதாநாயகி என்றாலும், மற்றொரு நாயகியாக ஓவியா நடித்திருந்தார். முன்னணி கதாநாயகியாக அவர் இருந்தாலும் யாமிருக்க பயமே படத்தில் அவர் நடித்தது சில்க் ஸ்மிதா நடித்த வேடங்கள் போல் கவர்ச்சியான வேடம்.
ஓவியாவின் கவர்ச்சிதான் இளைஞர்களை தியேட்டருக்கு இழுத்து வந்தது என்றெல்லாம் திரையுலகில் சொல்லப்பட்டநிலையில், யாமிருக்க பயமே படத்தின் புரமோஷன்களில் ஓவியா மிஸ்ஸிங். அது மட்டுமல்ல, அண்மையில் நடைபெற்ற சக்ஸஸ்மீட்டிலும் ஓவியாவின் தலை தென்படவில்லை.
என்ன காரணம் என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்தான்
இது…
யாமிருக்க பயமே படத்தின் முழு படப்பிடிப்பும் டில்லி அருகில் உள்ள நைனிடால் என்ற ஊரில்தான் நடைபெற்றது. படக்குழுவினர் சுமார் 60 நாட்கள் அங்கேயே தங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட்டு வந்தனர்.
நைனிடாலில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, விரும்பத்தகாத பல சம்பவங்களை சந்தித்திருக்கிறார் ஓவியா. அதன் காரணமாக இயக்குநர் டிகே மற்றும் கதாநாயகன் கிருஷ்ணா உடன் பெரிய சண்டையே போட்டிருக்கிறார் ஓவியா.
சென்னைக்கு திரும்பியதும் இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் பஞ்சாயத்து பண்ணினாராம் ஓவியா.
இதன் காரணமாகவே யாமிருக்க பயமே படத்தின் புரமோஷன், சக்சஸ்மீட் உட்பட எதற்கும் ஓவியாவை அழைக்கவில்லையாம். ஓவியாவை கூப்பிட்டால் நடந்த சம்பவங்களை பற்றி மீடியாக்களிடம் வாய் திறந்துவிடுவார் என்று பயந்துவிட்டார்களோ?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...