சென்னை,ஜூன்.13 (டி.என்.எஸ்) விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து
பல வெற்றிப் படங்களை இயக்கியவர் கே.செல்வபாரதி. இவர் நீண்ட இடைவெளிக்குப்
பிறகு இயக்கி தயாரித்திருக்கும் படம் 'காதலைத்தவிர வேறொன்றுமில்லை'.
இப்படத்தில் நாயகனாக சாட்டை படத்தில் நடித்த யுவன் நடிக்க, நாயகியாக சரண்யா
மோகன் நடிக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. பல முன்னணி திரையுலக
பிரமுகர்களுடன் தொடர்பு வைத்துள்ள இயக்குநர் செல்வபாரதி, எந்தவித ஆடம்பர விழாக்கள் இன்றி, எளிமையான முறையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்தினார்.
இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, "நான் மணிவண்ணன் சாரை அப்பா என்று தான் அழைப்பேன். அவரிடம் உதவி இயக்குநரக பணியாற்றிய போது சினிமா மட்டும் இன்றி அரசியல் உள்ளிட்ட பலவற்றை எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். இயக்குநராக பல படங்களை இயக்கியிருந்தாலும், இந்த படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக அறிமுகமாகிறேன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை அப்பா மணிவண்ணன் தலைமையில், பிரம்மாண்டமாக தான் நடத்த திட்டமிட்டிருந்தேன்.
ஆனால், அவர் மரணம் அடைந்ததால், அவர் இல்லாமல் எனக்கு விழா நடத்த விருப்பமில்லை. அதனால் தான் எளிமையான முறையில் இந்த விழாவை நடத்தினேன்." என்றார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. பல முன்னணி திரையுலக
பிரமுகர்களுடன் தொடர்பு வைத்துள்ள இயக்குநர் செல்வபாரதி, எந்தவித ஆடம்பர விழாக்கள் இன்றி, எளிமையான முறையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்தினார்.
இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, "நான் மணிவண்ணன் சாரை அப்பா என்று தான் அழைப்பேன். அவரிடம் உதவி இயக்குநரக பணியாற்றிய போது சினிமா மட்டும் இன்றி அரசியல் உள்ளிட்ட பலவற்றை எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். இயக்குநராக பல படங்களை இயக்கியிருந்தாலும், இந்த படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக அறிமுகமாகிறேன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை அப்பா மணிவண்ணன் தலைமையில், பிரம்மாண்டமாக தான் நடத்த திட்டமிட்டிருந்தேன்.
ஆனால், அவர் மரணம் அடைந்ததால், அவர் இல்லாமல் எனக்கு விழா நடத்த விருப்பமில்லை. அதனால் தான் எளிமையான முறையில் இந்த விழாவை நடத்தினேன்." என்றார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...