Advertisement

Monday, June 16, 2014

கூட்டத்தை சேர்க்க ஆரம்பித்துவிட்ட ஜி.வி.பிரகாஷ்

சென்னை,ஜூன்.14 (டி.என்.எஸ்) இசையமைப்பாளராக இருந்த வரைக்கும் சரி, தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகிவிட்டார் அல்லவா, அதனால் இனி கூட்டத்தை சேர்க்க வேண்டும் என்ற முடிவும் எடுத்துவிட்டார்.

'பென்சில்' படத்தின் மூலம் ஹீரோவாகப் போகும் ஜி.வி.பிரகாஷ்,
முதல் படம் வெளியாகும் முன்பே இரண்டாவது படத்திற்கான வேலையையும் தொடங்கிவிட்டார்.இதற்கிடையில் நேற்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடிய அவர், ரசிகர் மன்றத்தையும் ஆரம்பித்துவிட்டார்.

அந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியவர், அப்படியே சென்னையில் உள்ள முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் உள்ளிட்ட பல சமூக சேவை அமைப்புகளுக்கு உணவையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இனி ஜி.வி.பிரகாஷை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் கூடவே வரும். (டி.என்.எஸ்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...