Advertisement

Monday, June 16, 2014

விமான நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட பிரகாஷ்ராஜ்

டெல்லி விமான நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், பயணி ஒருவருடன் மோதலில் ஈடுபட்டதால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து சென்னைக்கு வருவதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பிரகாஷ்ராஜ், ஏர் இந்தியா கவுண்டரில், பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, வரிசையில் நின்ற மற்றொரு பயணி பிரகாஷ்ராஜை
தள்ளிவிட்டுள்ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழப்போன் பிரகாஷ்ராஜ், பிறகு சுதாரித்துக்கொண்டு நின்றுள்ளார்.

இதனால், கோபமடைந்த பிரகாஷ்ராஜ், அந்த பயணியை கண்டித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட, ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது சட்டை காலரை பிடித்துக்கொண்டு இழுக்கும் நிலைக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த மற்ற பயணிகள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...