Advertisement

Monday, June 16, 2014

தெலுங்கு திரையுலகம் தான் என் வீடு – ஸ்ரேயா கூறுகிறார்…!

‘இந்திரலோகத்தில நா. அழகப்பன்’ படத்தில் வடிவேலுவுடன் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய காரணத்தால் தமிழ்த் திரையுலகில் இருந்தே ஒதுக்கப்பட்டவரானார் ஸ்ரேயா.
ரஜினிகாந்த் ஜோடியாக ‘சிவாஜி’ படத்தில் நடித்தாலும், பல இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தாலும் கடந்த சில வருடங்களாகவே தமிழில் எந்த வாய்ப்பும் இல்லாமல் தவித்து வந்தால்.
இந்த சூழ்நிலையில் சிறு இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் அவர் நடித்த ‘மனம்’ படம் நல்ல வெற்றியைப் பெற்றது. ஒரு காலத்தில் தெலுங்குத் திரையுகில் தனது கிளாமராலும் பேசப்பட்டவராக இருந்தவர் ஸ்ரேயா.

பல புது நடிகைகளின் வரவால் அவருடைய மார்க்கெட் அங்கும் ஆட்டம் கண்டது. அவருக்கு நெருக்கமான நடிகர்கள் கூட அவரைக் கண்டு கொள்ளவில்லை. இருந்தாலும் பழைய நட்பின் காரணமாக நாகார்ஜுனா அவருடைய ஜோடியாக ஸ்ரேயாவை மீண்டும் ‘மனம்’ படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தின் வெற்றி ஸ்ரேயாவுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
“மனம்’ படத்திற்கு நீங்கள் அளித்த பாராட்டுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தெலுங்குத் திரையுலகம் என் வீடு மாதிரி.
மீண்டும் என்னுடைய மனம் கவர்ந்த சூப்பர்ஸ்டார்களுடன் நடித்தது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. உங்கள் ஆதரவிற்கு நன்றி,” என அவர் தெரிவித்துள்ளார். இந்த படம் மூலம் மீண்டும் தெலுங்கில் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பியுள்ளாராம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...