Advertisement

Sunday, June 15, 2014

தத்து பிள்ளைகளுடன் வெற்றியை கொண்டாடும் ஹன்சிகா!!

சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதை விட ஹிட் லிஸ்ட் ஹீரோக்களுடன் நடிக்கும்போதுதான் நடிகைகளின் மார்க்கெட்டும் உயர்கிறது என்று கூறும் ஹன்சிகா, இனிமேல் ஹிட் படங்களை கொடுத்து வரும் ஹீரோக்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாராம்.

குறிப்பாக, சேட்டை படத்தின் தோல்விக்குப்பிறகு நடித்த சிங்கம்-2, தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற படங்கள் வெற்றியால், தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு வந்த நேரத்தில் இப்போது மான்கராத்தே படமும் 50 நாட்கள் ஓடி ஹிட் படமாகியிருப்பதால் உற்சாகத்தில் துள்ளிக்குதித்துக கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
இந்த வெற்றியை கொண்டாடி மகிழ, சிலரைப்போன்று உடனடியாக அவர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யவில்லை. மாறாக, தான் தத்தெடுத்துள்ள பிள்ளைகளை சந்தித்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.
அந்த மாதிரி பிள்ளைகளுடன் சந்தோசத்தை கொண்டாடும்போது ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அந்த சந்தோசத்துக்கு இணை எதுவுமே இல்லை என்கிறார் ஹன்சிகா.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...