Advertisement

Sunday, June 15, 2014

மேனேஜர்கள் செய்த குழறுபடியால் அம்மாவையே மேனேஜராக்கிய ஸ்ரீதிவ்யா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆந்திர நடிகை ஸ்ரீதிவ்யா. அந்த படத்தின் மெகா ஹிட் காரணமாக, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டான அவர், தற்போது மீண்டும் அதே சிவகார்த்திகேயனுடன் டாணா படத்திலும் நடித்து வருகிறார்.
இதனால் அவர் அடுத்து இன்னும் பிசியான நடிகையாகி விடுவார் என்று இப்போது அவரை புக் பண்ண படாதிபதிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த நேரத்தில் தனக்கு படங்கள் வாங்கித்தந்த சில மேனேஜர்களை கழட்டி விட்டுள்ள ஸ்ரீதிவ்யா, ஹன்சிகாவைப்போலவே தனது அம்மாவையே தனது கால்சீட் மேனேஜராக்கியுள்ளார்.
இதுபற்றி ஸ்ரீதிவ்யா கூறுகையில், தெலுங்கு படங்களில் நடித்து வந்த என் போட்டோக்களை பார்த்து விட்டு
விதார்த் நடித்த காட்டுமல்லி படத்துக்காக என்னை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
அந்த படத்தில் நடித்து வந்தபோதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் கிடைத்து. அந்த படத்தின் வெற்றிக்குப்பிறகு எனக்கு படம் வாங்கித்தருவதாக பல மேனேஜர்கள் வந்தனர்.
அப்படி வந்தவர்கள் அனைவருமே, நல்ல கதை, நல்ல டைரக்டர் என்பதை மனதில் கொள்ளாமல், தங்களுக்கு அதிக கமிசன் கிடைக்கும் கம்பெனிகளாக கொண்டு வந்தனர். இதனால் சில தவறான படங்களில் நான் கமிட்டாக வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
ஆனால், இந்தநிலை தொடர்ந்தால் மார்க்கெட் அவுட்டாகி விடும் என்பதை உணர்ந்து, இப்போது எனக்கான கால்சீட் பார்க்க எனது அம்மாவை நியமித்து விட்டேன் என்று சொல்லும் ஸ்ரீதிவ்யா, இப்போது என் அம்மாவே கால்சீட் பார்ப்பதால் கதை மட்டுமின்றி கால்சீட் விசயத்தில் ரொம்ப கவனமாக செயல்படுகிறார்.
குறிப்பாக, பணத்துக்காக எந்தவொரு படத்தையும் நான் ஓ.கே செய்வதில்லை. கதை மற்றும் எனக்குரிய கதாபாத்திரம் பிடித்தால் மட்டும் அந்த படங்களை ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...