நடிகை மனோரமாவுக்கு இன்று திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்,
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
77வயது ஆகும் நடிகை மனோராமாவுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பிறகு ஒரு முறை குளியல் அறையில் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் அடிபட்டது, இதையடுத்து மருடுதுவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், மீண்டும் திடீர் உடல் நலக்குறைவால் மீண்டும் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய ரத்தத்தில் பொட்டாஷ் குறைவாக இருப்பதாகவும், 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
77வயது ஆகும் நடிகை மனோராமாவுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பிறகு ஒரு முறை குளியல் அறையில் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் அடிபட்டது, இதையடுத்து மருடுதுவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், மீண்டும் திடீர் உடல் நலக்குறைவால் மீண்டும் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய ரத்தத்தில் பொட்டாஷ் குறைவாக இருப்பதாகவும், 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...