Advertisement

Wednesday, June 18, 2014

ஒரே படத்தை நான்கு மொழிகளில் தயாரிக்கும் தியாகராஜன்

தமிழக ரசிகர்களுக்கு மலையூர் மம்பட்டியானாக அறியப்பட்ட நடிகர் தியாகராஜன், தற்போது தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் வலம் வருகிறார். தனது மகன் பிரசாந்தை வைத்து, மலையூர் மம்பட்டியான் படத்தை 'மம்பட்டியான்' என்ற தலைப்பில் ரீமேக் செய்த இவர், தற்போது இந்திப் படம் ஒன்றை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்ய உள்ளார்.


இந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற 'குயின்' என்ற படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக் உரிமையை பெற்றுள்ள தியாகராஜன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ரீமேக் செய்கிறார்.

தற்போது இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வில் ஈடுபட்டுள்ள அவர், இப்படத்திற்கான மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளார்.

தற்போது தனது மகன் பிரசாந்தை வைத்து 'சாகசம்' என்ற படத்தை மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்ட படமாக தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...