Advertisement

Monday, June 16, 2014

விக்ரமுக்காக பாலிவுட் வாய்ப்பை உதறிய சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தாலும், சில நடிகைகள் பாலிவுட் சினிமாவில் நுழைய ஆசைப்பட்டுக் கொண்டிருக்க, நடிகை சமந்தாவோ, தமிழ்ப் படத்திற்காக பாலிவுட் வாய்ப்பையே உதறியிருக்கிறார்.

கோலி சோடா படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், அடுத்ததாக விக்ரமை வைத்து படம் இயக்குகிறார். 'பத்து எண்ணுரதுக்குல்ல' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக தான் சமந்தா, பாலிவுட் பட வாய்ப்பை உதறியிருக்கிறார்.மேலும், இப்படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேடத்தில் கிராமத்து பெண்ணாகவும், ஒரு வேடத்தில் நகர பெண்ணாகவும் நடிக்கிறாராம்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...