Advertisement

Wednesday, June 18, 2014

என்னை யாரும் தொடர்பு கொள்ளா வேண்டாம் : குஷ்பு வேண்டுகோள்

திமுக-வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, அடுத்ததாக பா.ஜ.க-வில் இணையப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ள குஷ்பு, இது குறித்து டிவிட்டர் இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சில நேரங்களில் கஷ்டமான முடிவுகளையும் புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் அதைத்தான் தற்போது செய்துள்ளேன். வாழ்க்கையில் எல்லா மேடு பள்ளங்களையும் நான் கடந்துவந்துள்ளேன். என் மீது அன்பு கொண்டவர்களின்
பெரிய ஆதரவு எனக்கு உள்ளது. தொடர்ந்து அத்தகைய அன்பு, நன்மதிப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

தி.மு.க. தலைவர் கலைஞர் மீது, என் வாழ்க்கை முழுவதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பேன். தலைவர் போல் அல்லாமல் எனக்கு தந்தையாகவே அவர் இருந்தார். அந்த உணர்வை யாரும் எடுத்து செல்ல முடியாது. நான் எனது நண்பர்களை கேட்டுக்கொள்வது எல்லாம், உங்களது ஆதரவுக்கு நன்றி. உங்களுக்கு நான் அதிக கடன்பட்டுள்ளேன்.

எனக்கு உணர்ச்சிகரமான நேரம் இது. பத்திரிகையாளர்கள் யாரும் என்னை சில நாட்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. அது குறித்த யூகங்களை விட்டுவிடுங்கள். கொஞ்சநாள் குடும்பத்தோடு தனியாக இருக்க விரும்புகிறேன்.

என்னை தாக்கி வெளியாகும் கருத்துகளை நான் காது கொடுத்து கேட்பதில்லை. நான் தற்போது வெளிநாடு செல்கிறேன். என்மீது நிறைய பேர் அன்பு வைத்தும், மிகச்சிலர் தாக்கியும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாதி மனதோடு ஒரு இடத்தில் இருப்பதற்கு பதில் ஒரு முடிவை நான் எடுத்துள்ளேன். தி.மு.க.வில் இருக்கும் வரை நான் சிறப்பாக பணியாற்றியுள்ளேன். இப்போது எனது மகள்கள் தான் எனக்கு உலகம். நான் எடுத்த முடிவுக்கு மதிப்பு கொடுத்து புரிந்த கொண்ட பத்திரிகையாளர்களுக்கு நன்றி.

இவ்வாறு நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...