Advertisement

Sunday, June 15, 2014

கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுக்கும் அஞ்சலி!

தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை அஞ்சலிக்கென்று ஒரு இமேஜ் இருந்தது. கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என்று மாறுபட்ட கதாபாததிரங்களில் பர்பாமென்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளின் கவர்ச்சிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் குடும்ப இமேஜிலிருந்து விடுபட்டு தானும் கவர்ச்சி அரிதாரம் பூசத் தொடங்கினார்.
என்றபோதும், அஞ்சலிக்கு பெரிதாக படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அப்படி நடித்த படங்களும் வெற்றி பெறாததால், பரபரப்பு இல்லாமல் இருந்தார்.

ஆர்யாவுடன் சேட்டை படத்தில் நடித்து முடித்த நேரம் திடீரென்று சித்தியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலி, அதையடுத்து கோடம்பாக்கத்துக்கு வரவே இல்லை.
இருப்பினும், சூர்யா நடித்த சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு அவருடன் குத்தாட்டம் போட்டிருந்தார். மேலும், சமீபகாலமாக ஆந்திராவிலும் அவரது மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதால் தற்போது அதிரடி குத்தாட்ட நடிகையாக அவதாரம் எடுத்திருக்கிறார் அஞ்சலி.
அதையடுத்து, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் தனக்கு பரிசட்யமான படாதிபதிகளிடம் தனது குத்தாட்ட பிரவேசத்தைப்பற்றி தகவல் கொடுத்திருக்கும் அவர், பாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் கவர்ச்சியை வாரி வழங்குகிறேன்.
ஆனால் என்னைப்போலவே நீங்களும் கஞ்சத்தனம் செய்யாமல் ஒரு பாட்டுக்கு 2 கோடி வரை சம்பளம் கொடுத்து எனக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் என்று அதிரடி ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார் அஞ்சலி.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...