Advertisement

Wednesday, June 18, 2014

'சிவப்பு' படத்தை வாங்கி வெளியிடும் ராஜ்கிரண்

சினிமாவில் வினியோகஸ்தராக அறிமுகமாகி, பிறகு தயாரிப்பாளராக வெற்றிப் பெற்று, இயக்குநர் மற்றும் ஹீரோ என்று வெற்றிக்கொடி நாட்டிய ராஜ்கிரண், பிறகு பணத்தை இழந்து கஷ்ட்டப்பட்டுக்கொண்டிருந்தார் என்பதை அனைவரும் அறிவர்.

பிறகு, குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த ராஜ்கிரண், தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா நடிகராக உள்ளார்.

இதற்கிடையில், 'கழுகு' என்ற படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ள படம் 'சிவப்பு'. இப்படத்தில் நவீன்சந்திரா நாயகனாகவும், ரூபா மஞ்சரி நாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


கட்டடம் கட்டும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், இலங்கை தமிழர்களைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படம் முடிவடைந்து பல மாதங்கள் ஆனாலும், படம் வெளியாவதில் காலதாமதம் ஆனது.

இதற்கிடையில் இப்படத்தை சமீபத்தில் பார்த்த ராஜ்கிரண், ரொம்பவே மகிழ்ச்சியடைந்துவிட்டாராம். இப்படம் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி தரும் என்று நம்பும் ராஜ்கிரண், படத்தை தானே வாங்கி வெளியிடவும் முடிவு செய்துவிட்டார்.

இதற்காக இப்படத்தை தயாரித்துள்ள, புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் மற்றும் முகதா ஆர்.கோவிந்தின் முக்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களிடையே ராஜ்கிரண் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பேச்சு வார்த்தை வெற்றிப் பெற்றால் 'சிவப்பு' படம் ஜூலை மாதம் வெளியாவது உறுதியாம். (

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...