தமிழ் சினிமாவில் தனது இசைப்பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் பின்னர்
பாலிவுட்டிற்கு சென்றார். அதையடுத்து ஹாலிவுட்டிலும் கால் பதித்தார்.
அப்படி அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர்
விருதுகளை பெற்றார். இதனால், ஹாலிவுட் சினிமாவில் ரஹ்மான்கென்று ஒரு தனி
இடம் கிடைத்தது.
அதனால், பின்னர் தமிழ்ப்படங்களுக்கு இசையமைக்க வந்தபோதும்,
ஹாலிவுட் படங்களை அவர் தவிர்க்கவில்லை. அவ்வப்போது ஒரு படத்துக்கு இசையமைத்து வந்தவர், இப்போது இன்னும் தீவிரமாகி விட்டார். அதிலும் எனது பிள்ளைகளை ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொன்னவர், இப்போது அமெரிக்காவிலேயே வீடு வாங்கி குடியேறி விட்டார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ரஹ்மான் குடியிருக்கும் வீட்டில் யாரோ மர்ம நபர்கள், கறுப்பு பெயிண்டை கொண்டு சுவற்றில் கிறுக்கி சென்று விட்டார்களாம். ஆனால் அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத ரஹ்மான், அதை போட்டோ எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஆக, டுவிட்டர் மூலம இந்த விசயத்தையும் உலகறிய செய்திருக்கிறார்.
அதனால், பின்னர் தமிழ்ப்படங்களுக்கு இசையமைக்க வந்தபோதும்,
ஹாலிவுட் படங்களை அவர் தவிர்க்கவில்லை. அவ்வப்போது ஒரு படத்துக்கு இசையமைத்து வந்தவர், இப்போது இன்னும் தீவிரமாகி விட்டார். அதிலும் எனது பிள்ளைகளை ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொன்னவர், இப்போது அமெரிக்காவிலேயே வீடு வாங்கி குடியேறி விட்டார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ரஹ்மான் குடியிருக்கும் வீட்டில் யாரோ மர்ம நபர்கள், கறுப்பு பெயிண்டை கொண்டு சுவற்றில் கிறுக்கி சென்று விட்டார்களாம். ஆனால் அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத ரஹ்மான், அதை போட்டோ எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஆக, டுவிட்டர் மூலம இந்த விசயத்தையும் உலகறிய செய்திருக்கிறார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...