Advertisement

Sunday, June 15, 2014

புறம்போக்கில் நானும் ஒரு ஹீரோதான்! – சொல்கிறார் கார்த்திகா

கே.வி.ஆனந்தின் கோ படத்தில் நடித்த கார்த்திகா, அந்த படத்தில் பெரிதாக பர்பாமென்ஸ் பண்ணவில்லை. ஆனால் அதற்கடுத்து பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்த அன்னக்கொடி அவரது திறமைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தது.
அந்த அளவுக்கு நகரத்தில் வாழ்ந்த கார்த்திகா, தன்னை முழுமையாக ஒரு கிராமத்தில் ஆடு மேய்க்கும் பெண்ணாக மாற்றிக்கொண்டு நடித்திருந்தார்.

ஆனால், அவரது துரதிர்ஷ்டம் அந்த படம் ஓடவில்லை. அதோடு, கதை சொல்ல செல்லும் டைரக்டர்களிடம் எக்கச்சக்கமாக கண்டிசன் போட்டதால் இவர் நமக்கு செட்டாக மாட்டார் என்று பல இயக்குனர்கள் கார்த்திகாவை தவிர்க்கத் தொடங்கினர். அதனால்தான் சிலகாலம தேடுவார் இல்லாமல இருந்தார் கார்த்திகா.
அதையடுத்து, இப்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஷாம், ஆர்யா, விஜயசேதுபதி என்ற மூன்று ஹீரோக்கள் நடிக்கிறார்கள். அப்படியென்றால் கார்த்திகாவுக்கு என்ன வேடம்? என்று கேட்டால், இந்த படத்தில் மூன்று கதாபாத்திரம் அல்ல நான்கு கதாபாத்திரங்கள். அந்த நான்காவது கதாபாத்திரம் நான்தான்.
இந்த படத்தைப்பொறுத்தவரை யாரையும் முன்வைத்து இல்லை. எல்லோருக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ளது. அந்த வகையில் பார்த்தால் நானும் ஒரு ஹீரோதான். எனக்கும் அந்த நடிகர்களை போன்று சண்டை காட்சியெல்லாம் உள்ளது.
அதோடு, ஒரு பாடல் காட்சிகளில் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத டேப் என்ற அரிய வகை நடனமாடியிருக்கிறேன் என்று சொல்லும் கார்த்திகா, இந்த புறம்போக்கு என்னை எதிர்காலத்தில் ஆக்சன் கதாநாயகியாக மாற்றுவதற்காக கிடைத்துள்ள படம் என்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...