Advertisement

Monday, June 16, 2014

மும்பையில் வீடு வாங்கினார் ஸ்ருதி ஹாசன்

இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், மும்பையில் தான் தங்குகிறார். மும்பை பந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு இருந்தார்.

வாடகை வீட்டில் தங்கி இருந்த போது கடந்த வருடம் நவம்பர் மாதம் ஸ்ருதிஹாசன் மீது தாக்குதல் நடந்தது. மர்ம மனிதன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து ஸ்ருதிஹாசனை தாக்கினான். பிறகு போலீசார் தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.


தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சில நாட்கள் தோழி வீட்டில் தங்கி இருந்தார். பிறகு வாடகை வீட்டுக்கே திரும்பி சென்றார். குடும்பத்தினரும் நண்பர்களும் வாடகை வீடு பாதுகாப்பாக இல்லை என்றும் அங்கிருந்து காலி செய்து விடும்படியும் வற்புறுத்தினர்.

இதையடுத்து சொந்தமாக வீடு வாங்க புரோக்கர் மூலம் தேடி வந்தார். மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்தமான வீடு ஒன்றை, ஸ்ருதி ஹாசன் சொந்தமாக வாங்கியுள்ளார். தற்போது புது வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்தி குடியேறி விட்டார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...