Advertisement

Monday, June 16, 2014

சூர்யாவை வைத்து பேய் படம் எடுக்கும் வெங்கட்பிரபு

சென்னை,ஜூன்.13  'பிரியாணி' படத்திற்குப் பிறகு வெங்கட்பிரபு சூர்யாவை வைத்து படம் இயக்கப் போகிறார் என்பதை அனைவரும் அறிவர். தற்போது அஞ்சான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா, அப்படம் முடிந்த உடன், வெங்கட்பிரபு படத்தில் நடிக்க உள்ளார்.


நயன்தாரா, எமிஜாக்சன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்திற்கு தலைப்பு வைப்பதில் குழப்பம் நீடித்திருந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு 'பூச்சாண்டி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தலைப்பில் மட்டும் பூச்சாண்டியல்ல, இப்படமும் நம்மை பயமுறுத்தும் பூச்சாண்டித்தனமான பேய் படம் தான்.

ஆக்ஷன் படமாக இருந்தாலும், அதை காமெடியாக சொல்லி வெற்றிப் பெற்று வந்த வெங்கட்பிரபு, தற்போது இந்த பேய் படத்தையும் காமெடியாகவே சொல்லப் போகிறாராம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...