‘அஞ்சான்’ படத்தில் நாயகியாக நடிக்கும் சமந்தா அந்த படத்தில் படு
கிளாமராக நடித்து வருகிறாராம். குறிப்பாக பாடல் காட்சிகளில் தாராளமாய்
நடிக்கிறார் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து பெரிய
நாயகர்களுடன் நடிப்பதால் கொஞ்சம் தாராளமாகவே நடித்து தமிழிலும் நம்பர் 1
இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறாராம்.
இங்கு ‘அஞ்சான்’ படத்தில் சமந்தா கிளாமராக நடிப்பது அவருக்கு ஆந்திராவில் ஒரு பிரச்சனையைக் கிளப்பி விட்டிருக்கிறது. இங்க இடி இடிச்சால் அங்க ஏன் மழை பெய்யுதன்னுதானே கேக்கறீங்க, விஷயம் இருக்கு.
சில மாதங்களுக்கு முன் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபு ‘ 1 நேநொக்கடைன்’ என்ற படம் வெளிவந்தது. அந்த
படத்தின் விளம்பர போஸ்டர் ஒன்றில், கடற்கரையில் மகேஷ் பாபு காலைப் பிடித்துக் கொண்டு படத்தின் நாயகி கிளாமராக உட்கார்ந்திருப்பதைப் போன்ற படம் வெளியானது.
அது குறித்து கடுமையாக விமர்சித்து சமந்தா டுவிட் செய்திருந்தார். இது மகேஷ் பாபு ரசிகர்களை கொந்தளிக்க வைத்து, சமந்தாவிற்கு எதிராக பல கருத்துக்களைத் தெரிவித்தனர். அவரை ஆந்திராவை விட்டே செல்ல வேண்டும் என்றெல்லாம் கூறினார்.
சமீபத்தில் ‘அஞ்சான்’ படத்திற்காக கடற்கரையில் சமந்தா படுத்துக் கிடக்க, சூர்யா அவரது காலைப் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் எப்படியோ வெளியாகிவிட்டது. இந்த படத்தைப் பார்த்து மகேஷ் பாபு ரசிகர்கள் மீண்டும் சமந்தாவைக் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மகேஷ் பாபு படத்தில் இடம் பெற்ற அந்த குறிப்பிட்ட காட்சி உண்மையிலே பெண்களைத் தரக்குறைவாக காட்டியிருக்கவே சமந்தா அப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த ‘அஞ்சான்’ காட்சி முற்றிலும் ரொமான்டிக்கான காட்சி, அப்படியிருக்க இதற்கு எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என சமந்தாவிற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்களாம்.
ம்ம்ம்…போகப் போக சமந்தா என்றால் சச்சரவு என்றாகிவிடும் போலிருக்கிறதே…!!
இங்கு ‘அஞ்சான்’ படத்தில் சமந்தா கிளாமராக நடிப்பது அவருக்கு ஆந்திராவில் ஒரு பிரச்சனையைக் கிளப்பி விட்டிருக்கிறது. இங்க இடி இடிச்சால் அங்க ஏன் மழை பெய்யுதன்னுதானே கேக்கறீங்க, விஷயம் இருக்கு.
சில மாதங்களுக்கு முன் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபு ‘ 1 நேநொக்கடைன்’ என்ற படம் வெளிவந்தது. அந்த
படத்தின் விளம்பர போஸ்டர் ஒன்றில், கடற்கரையில் மகேஷ் பாபு காலைப் பிடித்துக் கொண்டு படத்தின் நாயகி கிளாமராக உட்கார்ந்திருப்பதைப் போன்ற படம் வெளியானது.
அது குறித்து கடுமையாக விமர்சித்து சமந்தா டுவிட் செய்திருந்தார். இது மகேஷ் பாபு ரசிகர்களை கொந்தளிக்க வைத்து, சமந்தாவிற்கு எதிராக பல கருத்துக்களைத் தெரிவித்தனர். அவரை ஆந்திராவை விட்டே செல்ல வேண்டும் என்றெல்லாம் கூறினார்.
சமீபத்தில் ‘அஞ்சான்’ படத்திற்காக கடற்கரையில் சமந்தா படுத்துக் கிடக்க, சூர்யா அவரது காலைப் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் எப்படியோ வெளியாகிவிட்டது. இந்த படத்தைப் பார்த்து மகேஷ் பாபு ரசிகர்கள் மீண்டும் சமந்தாவைக் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மகேஷ் பாபு படத்தில் இடம் பெற்ற அந்த குறிப்பிட்ட காட்சி உண்மையிலே பெண்களைத் தரக்குறைவாக காட்டியிருக்கவே சமந்தா அப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த ‘அஞ்சான்’ காட்சி முற்றிலும் ரொமான்டிக்கான காட்சி, அப்படியிருக்க இதற்கு எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என சமந்தாவிற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்களாம்.
ம்ம்ம்…போகப் போக சமந்தா என்றால் சச்சரவு என்றாகிவிடும் போலிருக்கிறதே…!!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...