Advertisement

Monday, June 16, 2014

தயாரிப்பாளருடன் மோதலில் ஈடுபட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது இந்தி சினிமாவையே மிரட்டி வரும் முன்னணி இயக்குநராக வலம் இவருக்கு பாலிவுட்டில் பெரும் வரவேற்பு இருக்கிறது.

கோலிவுட், பாலிவுட் என்று படு பிஸியாக இயங்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது தயாரிப்பிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பில் இறங்கிற முருகதாஸ், தற்போது பல தயாரிப்பாளர்களுடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார்.


அதன்படி, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதனுடன் இணைந்து முருகதாஸ் தயாரித்த படம் 'மான் கராத்தே'. இப்படம் வசூலில் சாதனைப் படைத்தது என்று கூறினாலும்,  வந்த லாபத்தில் பங்கு பிரிப்பது தொடர்பாக தயாரிப்பாளர் மதனுக்கும், முருகதாஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மான் கராத்தே படத்தை முருகதாஸின் உதவி இயக்குநர் தான் இயக்கினார். மேலும் அப்படத்தின் கதையையும், முருகதாஸ் தான் எழுதியிருந்தார். படத்திற்கு சொன்ன பட்ஜெட்டை விட, பல கோடிகள் அதிகமாகிவிட்டதாம். இந்த காரணத்தினால் தான், வசூலில் மதன் பங்குகொடுக்க மறுத்துவிட்டாராம்.

லாபத்தில் பங்கு கேட்ட முருகதாஸுக்கு மதன் நோ, சொன்னதால், தற்போது முருகதாஸ், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட உள்ளாராம். அங்கே எடுபடவில்லை என்றால், நீதிமன்றத்திற்கு போகவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...