Advertisement

Monday, June 16, 2014

அடுத்த நயன்தாராவாக மாறும் லட்சுமிமேனன்!

கேரளாவில் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது கும்கி படத்தில் கமிட்டானார் லட்சுமிமேனன். முதல் படமே ஹிட்டடித்ததால் அடுத்தடுத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் என பல படங்களில் நடித்தார்.
அப்படி அவர் நடித்த அத்தனை படங்களுமே வெற்றி பெற்றது. அதனால் லட்சுமிமேனன் நடித்தால் படம் கட்டாயம் ஹிட்டாகும் என்பது கோலிவுட்டின் செண்டிமென்டாக மாறியது.

இந்த நிலையில்தான், சித்தார்த்துடன் ஜிகர்தண்டா, விமலுடன் மஞ்சப்பை ஆகிய படங்களில கமிட்டானார் லட்சுமிமேனன். இந்த இரண்டு படங்களுமே வில்லேஜ் கதை என்பதால் பக்கா கிராமத்து பெண்ணாகவே தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்தார். அதிலும் மஞ்சப்பை லட்சுமிமேனன் அதிகப்படியாக எதிர்பார்த்த படமாக இருந்தது.
ஆனால், இப்போது படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. என்றபோதும், அதில் விமலும், லட்சுமிமேனனும்கூட சிறப்பாகத்தான் நடித்துள்ளனர்.
இருப்பினும்,. படத்தின் வெற்றிக்கு முழுக்காரணமும் ராஜ்கிரணின் நடிப்பு மட்டுமே என்பதுபோல் பப்ளிசிட்டி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், விமலை விட லட்சுமிமேனன் செம கடுப்பில் இருக்கிறாராம்.
ஒரு படம் என்றால் அதில் நடித்த அத்தனை பேரும்தான் அதில் உழைக்கிறோம். அதேபோல் வெற்றியும் அனைவருக்கும் பொதுவானதுதான் ஆனால், கஷ்டப்பட்டு நடித்தும் நம்மை இருட்டடிப்பு செய்து வருகிறார்களே என்று விமலைப்போலவே இப்போது லட்சுமிமேனனும் கோபத்தில் இருக்கிறார்.
அதன்காரணமாக, அப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவரை அழைத்தபோது, எனக்கு படிக்கிற வேலை நிறைய இருக்கு என்று சொல்லி தட்டிக்கழித்து விட்டாராம் நடிகை.
லட்சுமிமேனனின் இந்த மாற்றம் கண்டு, இவரும் நயன்தாரா மாதிரி ஆகிவிடுவார் போலிருக்கே என்கிறது மஞ்சப்பை யூனிட்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...