Advertisement

Monday, June 16, 2014

மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் கானா பாலா

வட சென்னையில் கானா பாடல் பாடி பிரபலமான கானா பாலா, தற்போதைய தமிழ் சினிமாவின் வெற்றி செண்டிமென்ட்டாக திகழ்ந்து வருகிறார். இவர் பாடும் பாட்டும் ஹிட்டு, அந்த படமும் ஹிட்டு என்ற ரீதியில்,  இவருடைய குரலில் ஒரு பாடலாவது பாட வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விரும்புகிறார்கள்.


அவர்களுடைய விருப்பத்தால், சாப்பிடக் கூட நேரமில்லாமல், பிஸியாக பாடி வரும் கானா பாலா, தான் சம்பாதிக்கும் தொகையில் இருந்து அவ்வபோது சில நல்ல விஷங்களையும் செய்து வருகிறார். அந்த வகையில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாணவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை வழங்கி வருகிறார்.

எவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தாலும் பரவாயில்லை, தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், அதற்கான ஆதரமாக மதிப்பெண் பட்டியலுடன், பாலாவை சென்று பார்க்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை கிடைப்பது உறுதி.

இதுவரை 500 மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கியுள்ள கானா பாலா, இந்த உதவி தொகையை 800 மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளார்.

சென்னை, வியாசர்பாடி பகுதியில் கானா பாலா வசிக்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...