Advertisement

Saturday, June 14, 2014

அப்துல்கலாம் ஆன்தம் எழுதிய பாடலாசிரியர் வேல்முருகன்!

மதில் மேல் பூனை, நேரம், சைகை, இருவர் உள்ளம் ஆகிய படங்களுக்கு பாடல் எழுதி வளர்ந்து வரும் பாடலாசிரியர் வேல்முருகன். இவர், சினிமா மட்டுமின்றி சினிமாவுக்கு வெளியேயும் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்.
அதாவது சமீபத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனான தோனியை மையமான வைத்து ஒரு பாடல் எழுதியிருந்தார். அண்ணாந்து பாரு அந்தரத்தில் ஓடு, கட்டி அடிப்பாரு எங்க சென்னை ஆளு -என்று தோனியின் அதிரடி விளையாட்டை மையப்படுத்தி
அவர் எழுதிய பாடல் தோனி ஆன்தம் என்ற பெயரில் வெளியானது.
அதோடு, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அபதுல்கலாமின் 83வது பிறந்த நாளையொட்டி உருவாக்கப்பட்ட இன்னொரு ஆன்தத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறாராம் வேல்முருகன்.
அதுபற்றி அவர் கூறுகையில், அந்த பாடல் அப்துல்கலாமின் பெருமைகளை சொல்லும் பாடல் இல்லை. இப்படியெல்லாம் இருந்தால் நீங்களும் அப்துல்கலாம்தான் என்பதை சொல்லும் விதமான பாடல்.
உழைச்சா நீயும ஜெயிக்கலாம் என்று தொடங்கும் அந்த பாடல் விரைவில் யு டியுப்பில் வெளியாக உள்ளது. அந்த வகையில் அப்துல் கலாமின் ஆன்தம் எழுதியது எனக்கு பெரிய சந்தோசத்தைக்கொடுத்துள்ளது.
மேலும், இந்த ஆன்தம் எழுதியதற்காக நானோ, இசையமைத்தவரோ, பாடியவரோ யாருமே பணம் வாங்கிக்கொள்ளவில்லை.
அப்துல்கலாமைப்பற்றி ஒரு ஆன்தம் உருவாக்க வாய்ப்புக்கிடைத்தை பெருமையாக நினைக்கிறோம் என்று கூறும் வேல்முருகன், இந்த ஆன்தத்தை விரைவில் பாண்டிசேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...