Advertisement

Saturday, June 14, 2014

சூர்யா – ஜெயம் ரவியின் கோபம்!

லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா தற்போது கோவாவில் சமந்தா உடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் பூச்சாண்டி படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கான போட்டோஷூட் கடந்த வாரம் நடைபெற்றது. விரைவில் பூச்சாண்டி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் பூச்சாண்டி படத்தை அடுத்து எந்தப் படத்தில் நடிப்பது என்பதையும் சூர்யா முடிவு செய்துவிட்டார்.
பூச்சாண்டி படத்தைத் தொடர்ந்து சீமான் இயக்கும் படத்தில்தான் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்ருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கோபம் என பெயர் சூட்டி உள்ளார் சீமான். இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடிக்கிறார் ஜெயம் ரவி. கோபம் படத்தில் சூர்யா, ஜெயம்ரவி இருவருக்கும் சமமான கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறாராம் சீமான்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...