Advertisement

Sunday, June 15, 2014

தம்பி புராணம் பாடிக்கொண்டு திரியும் ஆர்யா!

சூர்யா தனது தம்பி கார்த்தியை சினிமாவில் கொண்டு வந்தது போல் ஆர்யாவும் தனது தம்பி சத்யாவை சினிமாவில் பெரிய நடிகராக்கி விட வேண்டும் என்று படித்துறை என்ற படத்தில் அறிமுகம் செய்தார்.
ஆனால் அந்த படம் இன்னும் படித்துறையை விட்டே இடம்பெயரவில்லை. அதனால் அதையடுத்து, டி.வி நடிகர் விஜய்ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் நடிக்க வைத்தார்.
அதோடு அந்த படத்தில் தம்பி நடித்த ஒரு
சண்டை காட்சியை ஹைலைட் பண்ணி, நான்கூட 15 படங்களில் நடித்து விடடேன் ஆனால் என் தம்பி அளவுக்கு சண்டை காட்சியில் பஞ்ச் கொடுத்ததில்லை என்று பில்டப் கொடுத்து வந்தார்.
ஆனால், ஆர்யாவை கவர்ந்த அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதனால் சத்யா நடிப்பில் வெளியான முதல் படமே ப்ளாப் ஆகி விட்டது.
அதையடுத்து தம்பியை வைத்து படம் தயாரிக்க யாருமே முன்வரமாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட ஆர்யா, இப்போது அமரகாவியம் படத்தை தானே தயாரித்திருக்கிறார். அதோடு, சமீபத்தில் அந்த படத்தைப்பார்த்த தனக்கு அழுகை வந்துவிட்டதாகவும் ஒரு பப்ளிசிட்டி டிராமாவை முடுக்கி விட்டிருந்தார்.
அதோடு நிறுத்தவில்லை, இப்போது, அமரகாவியம் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு சிறந்த காதல் படமாக இருக்கும் என்று கூறி வரும் ஆர்யா, தம்பி சத்யா இந்த படத்தில் நடிப்பில் சிகரம் தொட்டு விட்டதாக அடுத்த பில்டப்பை எடுத்து விட்டு வருகிறார்.
ஆனால் அவர் சொல்லும்போது அப்படியா அப்படியா என்று ஆச்சர்யத்துடன் கேட்பவர்கள், அவர் திரும்பியதும் குபீர் என்று சிரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...