Advertisement

Sunday, June 15, 2014

ஆஜானபாகு ஹீரோக்களைக்கண்டு அலறும் ஸ்ரீதிவ்யா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதையடுத்து எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் அவர் மீதுதான பரபரப்பை காணவில்லை. ஆனால், திரையுலகில் அவருக்கு நல்ல ஆபர் இருந்து வருகிறது.
காரணம், லட்சுமிமேனன், ப்ரியாஆனந்த், நந்திதா உள்ளிட்ட சில நடிகைகள் எக்கச்சக்கமாக கண்டிசன்கள் போட்டு வருகின்றனர். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ, சில படங்களில் நடிக்க கதையைகூட கேட்பதில்லை பெரிய டைரக்டர் என்றால் ஓ.கே சொல்லி விடுகிறார்.
அதோடு, படப்பிடிப்பில் தளத்துக்கு வந்து இருக்கிற இடமே தெரியாமல இருக்கும் அவர், கொடுக்கும் காஸ்டியூமை எந்த குற்றம் குறையும் சொல்லாமல் அணிந்து கொண்டு நடித்துக்கொடுக்கிறார். இதனால்,
அவரை வைத்து படம் பண்ணி வரும் டைரக்டர்களெல்லாம் ஸ்ரீதிவ்யாவை தங்களது செல்லப்பிள்ளை என்கிறார்கள்.
விளைவு, ஸ்ரீதிவ்யாவுக்கு அடுத்து பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியிருக்கிறது. ஆனால், அப்படி தன்னை தேடி வரும் படங்களின் ஹீரோக்கள் தன்னை விட நல்ல உயரமாக வாட்டசாட்டமாக இருந்தால், அய்யோ இவர்கூட நான் எப்படி நடிப்பது. இவர் பக்கத்தில் நான் நின்றால் காணாமல் போய் விடுவேன் என்று அலறுகிறாராம் ஸ்ரீதிவ்யா.
அதோடு, சிவகார்த்திகேயன், அதர்வா மாதிரியான இளவட்ட நடிகர்கள்தான் எனக்கு மேட்சாக இருப்பார்கள் என்று கூறும் அவர், அடுத்தபடியாக விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களுக்கும் நான் பொருத்தமாகவே இருப்பேன் என்று அவர்களுடன் நடிக்க தனக்கு இருக்கிற ஆர்வத்தையும் இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகிறாராம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...