Advertisement

Sunday, June 15, 2014

இளையராஜாவின் ரசிகன் நான்! பவர்ஸ்டார் உற்சாகம்!!

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை ஒரு பெரும் கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் பவர்ஸ்டார் சீனிவாசன்.
ஆனால் அவர் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோது, மோசடி வழக்கில் சிக்கியதால் அவர் கமிட்டான படங்களில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதையடுத்து ஜெயிலுக்கு சென்ற அவர் ஜாமீனில் வெளியே வந்தபோதும் அவர் பக்கம் யாரும் திரும்பவில்லை.
மேலும், அவர் பெரிதாக எதிர்பார்த்த சந்தானம்கூட வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் பவர்ஸ்டாரை ஒரேயொரு ஷாட்
மட்டும் காண்பித்து விட்டு முடித்துக்கொண்டார்.
இதனால் சினிமாவில் தனக்கு எதிர்காலம் இல்லாமல் போய் விடுமோ என்று அவர் புலம்பிக்கொண்டுவந்த நேரம்தான் இப்போது கிடாய் பூசாரி மகுடி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பவர்ஸ்டாருக்கு கிடைத்துள்ளது.
சந்தானம் காமெடியனாக இருந்து ஹீரோ ஆனது போல், காமெடியன் பவர்ஸ்டாரை இப்படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்க வைக்கிறார்களாம். அதோடு, இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
அதனால், சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கிறார் பவர்ஸ்டார். இளையராஜாவின் பெரிய ரசிகன் நான். அதனால் அவர் நான் நடிக்கிற படத்துக்கு இசையமைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி வரும் பவர்ஸ்டார், தனது எதிர்பார்ட்டி நடிகர்களுக்கெல்லாம் இந்த விசயத்தை தெரியப்படுத்தி தனது சந்தோசத்தை கொண்டாடி வருகிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...