Advertisement

Sunday, June 15, 2014

பிரியதர்ஷன் இயக்கத்தில் சூர்யா…!!

மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி இந்திய அளவிலும் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன். தமிழில் “கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா,” தேசிய விருது பெற்ற ‘காஞ்சீவரம்’ ஆகிய
படங்களை இயக்கியவர்.
கடைசியாக அவர் இயக்கி மோகன்லால் நடித்து சென்ற ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த ‘கீதாஞ்சலி’ படம் தோல்விப் படமாக அமைந்தது.
தற்போது தமிழிலும், மலையாளத்தில் இரண்டு படங்களை இயக்க முடிவெடுத்திருக்கிறாராம். தமிழ்ப் படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், மலையாளப் படத்தில் ஃபகத் பாசிலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
பிரகாஷ்ராஜ், ஷம்மு நடித்து பிரியதர்ஷன் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளிவந்த ‘காஞ்சீவரம்’ படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும், அந்த ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. ஏறக்குறைய ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் படத்தை இயக்க உள்ளார் பிரியதர்ஷன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...