Advertisement

Sunday, June 15, 2014

பிரபுதேவாவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழிக்கிறார் நயன்தாரா!


சிம்புவுடனான காதல் முறிந்து போன பிறகு சில ஆண்டுகளில் நயன்தாராவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. ஓரிரு ஆண்டுகளாக அவரை தீவிரமாக காதலித்த நயன்தாரா, அவர் மீது தான் கொண்ட காதலை நிரூபிக்க கிறிஸ்தவ மதத்தில் இருந்தே இந்துவுக்கு மாறினார். இதனால் பிரபுதேவா மீது நயன்தாரா
கொண்ட காதல் ரொம்ப உறுதியானது என்பதை உணர்த்தியது.
ஆனபோதும், திருமணம் செய்து கொண்டு அவர்கள் மும்பையில் செட்டிலாகப்போகிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று பிரபுதேவா-நயன்தாராவுக்கு இடையிலான காதல் முறிந்து பிரிந்து விட்டார்கள்.
அதனால் ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்ததோடு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வெளியேறிய நயன்தாரா, ஆரம்பம் படத்தில் இருந்து மறுபிரவேசத்தை தொடங்கினார்.
ஆக, தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாக விட்ட நயன்தாரா, தனது கையில் பச்சை குத்தியுள்ள பிரபுதேவாவின் பெயரை மேக்கப் போட்டு மறைத்துக்கொண்டுதான் நடித்து வருகிறார்.
ஆனால், இப்போது அவரே இல்லை என்று ஆனபிறகு அவரது பெயர் எதற்காக தனது கையில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர், இந்தி நடிகை தீபிகா படுகோனே தான் ரன்பீர் கபூரை காதலித்தபோது பச்சை குத்திய அவரது பெயரை பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நீக்கியதைப்போன்று இப்போது தானும் பிரபுதேவாவின் பெயரை நீக்க முடிவெடுத்துள்ளாராம்.
இதுகுறித்து ஏற்கனவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட தீபிகா படுகோனேயை சந்தித்து ஆலோசனை பெறவும் முடிவெடுத்துள்ளாராம் நயன்தாரா.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...