Advertisement

Sunday, June 15, 2014

கோச்சடையானைப்பற்றி வதந்தி பரப்பாதீர்கள்! ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை!!

ரஜினி நடிப்பில் உலக முழுவதும் சுமார் 6 ஆயிரம் தியேட்டர்களில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது கோச்சடையான். ஆனால் இப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே, இது பொம்மை படம் எனறு சிலர் செய்தி பரப்பி விட்டனர்.
அதோடு, டிவியில் வரும் கார்ட்டூன் படம் மாதிரிதான் கோச்சடையான் என்றும் ஆளாலுக்கு செய்திகள் பற்ற வைத்து விட்டனர்.
அதோடு, டைரக்டர் ராம்கோபால் வர்மா வேறு, ரஜினியின் மார்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், கோச்சடையானில் அவரது மார்பை பெரிதாக காண்பித்திருக்கிறார்கள்.
இது அவருக்கு அத்தனை அழகாக இல்லை என்று தனது கருத்து தெரிவித்திருந்தார். இப்படி கோச்சடையான் பற்றி ஆளாலுக்கு இயல்பாக சொன்ன கருத்துக்கள்கூட படத்தின் வெற்றியை பாதிக்குமோ என்று படம் திரைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்புவரை ரஜினி வட்டாரம் பெருத்த அதிர்ச்சியில்தான் இருந்தது.
ஆனால், இப்போது எதிர்பார்த்ததை விட தியேட்டர்களில் கூட்டம் காணப்படுகிறது. இருப்பினும், இனிமேலும் யாரும் படத்தைப்பற்றி கருத்து சொல்லக்கூடாது என்பதற்காக ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள செய்தியில், கோச்சடையானை சிலர் பொம்மை படம் என்று சொன்னார்கள். இன்னும் சிலர் குழந்தைகள் டி.வியில் பார்க்கும் படம் என்றார்கள்.
ஆனால் இப்போது அனைத்து கருத்துக்களையும் முறியடித்து வெற்றிகரமாக கோச்சடையான் ஓடிக்கொண்டிருககிறது. அதனால் இனிமேல் கோச்சடையான் பற்றி கருத்து சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
அதோடு படத்தை மாபெரும் வெற்றியடைய செய்வதற்காக திருட்டு விசிடி வெளியாகாமல் தடுக்குவும், ரஜினி ரசிகர்கள் பாதுகாபபு கவசமாக செயல்பட்டு வருகிறார்களாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...