Advertisement

Sunday, June 15, 2014

மீண்டும் ஸ்லிம்மாக மாறிய ஐஸ்வர்யாராய்!

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நடிப்பதை தவிர்த்த ஐஸ்வர்யாராய், ஆரத்யாவை பெற்றுக்கொண்டவர் இப்போது அவர் ஓரளவு வளர்ந்து விட்டதால், ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி விட்டார்.
ஏற்கனவே பல படவாய்ப்புகள் முற்றுகையிட்டபோது தனது உடல் பருமன் காரணமாகவே அப்படங்களில் நடிக்க மறுத்து வந்த ஐஸ்வர்யாராய், இப்போது தனது உடல்கட்டு மீண்டும் பழைய ஐஸ்வர்யாராயாட்டம் ஸ்லிம்மாகி விட்டதால், மீண்டும் நான் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி விட்டதாக தனது அபிமான டைரக்டர்கள் சிலருக்கு சமீபத்தில் தகவல் அனுப்பினாராம்.
அதையடுத்து, முதல் நபராக
ஐஸ்வர்யாராயை 1997ல் இருவர் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தவரான மணிரத்னம், தான் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு ஐஸ்வர்யாராயை புக் பண்ணியுள்ளார்.
இந்த தகவலை சமீபத்தில் ஐஸ்வர்யாராயே உறுதிபடுத்தி விட்டார். அதோடு, இன்னும் சில இந்தி படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளாராம் ஐஸ்வர்யாராய்.
மேலும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்பு நடித்ததை போல இந்த படங்களிலும் யூத் கெட்டப்பிலேயே நடிக்கும் ஐஸ்வர்யாராய், பர்பாமென்ஸ் மட்டுமின்றி கிளாமர் விசயத்திலும் எந்தவித தங்குதடையுமின்றி முன்பு நடித்தது போலவே களமிறங்கப்போகிறாராம்.
ஆக, ஐஸ்வர்யாராயின் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் படு அமர்க்களமாக இருக்கும் என்று பாலிவுட்டில் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...