தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டை ஒரு காலத்தில் மணிரத்னம், ஷங்கர்
இருவரும் அவ்வப்போது கலக்கி வந்தனர். ஆனால், இப்போது பிரபுதேவா அங்கேயே
முகாமிட்டு கமர்சியல் ஹிட் படங்களாக இயக்கிக்கொண்டிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் அவ்வப்போது ஒரு இந்தி படத்தை இயக்கி மெகா ஹிட்டாக கொடுத்து வருகிறார்.
அவரது இந்தி பட வரிசையில், கஜினி ரீமேக் படம் மெகா ஹிட்டாக அமைந்ததையடுத்து,
தமிழில் விஜயகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய ரமணா படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் தாகூர் என்ற பெயரிலும் மெகா ஹிட்டானது.
அதையடுத்து, இப்போது தமிழில் விஜய் நடிப்பில் ஹிட்டடித்த துப்பாக்கி ரீமேக்கும் ஹாலிடே என்ற பெயரில் இந்தியில் வெளியாகியுள்ளது. அக்சய்குமார் நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளி அன்றுதான் வெளியானது.
அந்த வகையில், வெளியான 3 நாளில் 41 கோடியை வசூலித்துள்ளதாம் ஹாலிடே. சமீபகாலமாக சற்று எடை போட்டிருந்த அக்சய்குமார், இந்த படத்திற்காக ஒர்ஜினல் ராணுவ வீரர்களைப்போலவே தனது உடல்கட்டை எடை குறைத்து நடித்திருத்திருப்பவர், படத்தின் பரபரப்பான வெற்றியினால் உற்சாகத்தில் இருக்கிறாராம்.
இந்த சந்தோசத்தை அவருடன் சேர்ந்து கடந்த சில தினங்களாக கொண்டாடி விட்டு தற்போது சென்னை வந்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் கத்தி பட வேலைகளில் உற்சாகத்தோடு இறங்கியிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் அவ்வப்போது ஒரு இந்தி படத்தை இயக்கி மெகா ஹிட்டாக கொடுத்து வருகிறார்.
அவரது இந்தி பட வரிசையில், கஜினி ரீமேக் படம் மெகா ஹிட்டாக அமைந்ததையடுத்து,
தமிழில் விஜயகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய ரமணா படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் தாகூர் என்ற பெயரிலும் மெகா ஹிட்டானது.
அதையடுத்து, இப்போது தமிழில் விஜய் நடிப்பில் ஹிட்டடித்த துப்பாக்கி ரீமேக்கும் ஹாலிடே என்ற பெயரில் இந்தியில் வெளியாகியுள்ளது. அக்சய்குமார் நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளி அன்றுதான் வெளியானது.
அந்த வகையில், வெளியான 3 நாளில் 41 கோடியை வசூலித்துள்ளதாம் ஹாலிடே. சமீபகாலமாக சற்று எடை போட்டிருந்த அக்சய்குமார், இந்த படத்திற்காக ஒர்ஜினல் ராணுவ வீரர்களைப்போலவே தனது உடல்கட்டை எடை குறைத்து நடித்திருத்திருப்பவர், படத்தின் பரபரப்பான வெற்றியினால் உற்சாகத்தில் இருக்கிறாராம்.
இந்த சந்தோசத்தை அவருடன் சேர்ந்து கடந்த சில தினங்களாக கொண்டாடி விட்டு தற்போது சென்னை வந்திருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் கத்தி பட வேலைகளில் உற்சாகத்தோடு இறங்கியிருக்கிறார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...