Advertisement

Friday, June 13, 2014

அனுஷ்காவுக்கு பிடித்த ஒரே தமிழ்ப்பாட்டு!

ரெண்டு படத்தில் மாதவனுடன் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் அனுஷ்கா, அதையடுத்து விஜய்யுடன் வேட்டைக்காரன், விக்ரமுடன் தெய்வத்திருமகள், தாண்டவம், சிம்புவுடன் வானம், சூர்யாவுடன் சிங்கம், சிங்கம்-2, கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் என பல படங்களில் நடித்து விட்டார்.
ஆனால், எந்த படத்திலும் பாடல்களை
அவர் ரசித்து கேட்டதே இல்லையாம். பாடல் காட்சியை படமாக்குகிறார்கள் என்று சொன்னதும், க்ளோசப் ஷாட் என்றால் மட்டும் அந்த வார்த்தையை வாயசைத்தபடி நடனமாடுவாராம். மற்றபடி அந்த பாடலை கேட்பதோ, அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளும் பழக்கமோ அவருக்கு கிடையாதாம்.
ஆனால், விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்துக்காக என் உச்சி மண்டையில சுர்ருங்குதே என்ற பாடலுக்காக நடனமாட ஸ்பாட்டுக்கு வந்தபோது, அந்த பாடலைக்கேட்டதும் குஷியாகி விட்டாராம் அனுஷ்கா.
அதையடுத்து, விஜய்யிடம் அந்த பாடலுக்கு இசையமைத்தது விஜய் ஆண்டனி, அந்த பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை என்பதை கேட்டு தெரிந்து கொண்டவர், முதன்முறையாக அந்த பாடலை விரும்பிக்கேட்டபடி தானும் பாடி மகிழ்ந்தாராம் அனுஷ்கா.
அதோடு நில்லாமல், அப்போதெல்லாம தமிழில் ஓரளவுகூட பேச தெரியாதபோதும், அந்த பாடலை திரும்பத்திரும்ப கேட்ட அனுஷ்கா, படப்பிடிப்பு தளங்களில் ஓய்வாக இருக்கும்போது என் உச்சி மண்டயில சுர்ருங்குதே என்ற அந்த பாடலின் பல்லவியை அவ்வப்போது இப்போதுவரை லயித்து பாடுகிறாராம்.
ஒரே பாட்டையே திரும்பத்திரும்ப பாடுகிறீர்களே ஏன் வேறு பாட்டே தெரியாதா? என்று யாராவது கேட்டால், தமிழில் எனக்கு தெரிந்த ஒரே பாட்டு மட்டுமின்றி எனக்கு பிடித்த ஒரே பாட்டும் இதுதான் என்கிறாராம் அனுஷ்கா.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...