தெலுங்கில் வெளிவந்த மகாதீரா (தமிழில் மாவீரன்) படத்தில் வந்த பவர்புல்
வில்லன் தேவ் சிங்கை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.
அவர்தான் இப்போது லிங்கா ரஜினியில் ஒரு வில்லனாக நடித்து வருகிறார்.
இன்னொரு வில்லன் ஜெகபதி பாபு என்கிறார்கள்.
இதுகுறித்து தேவ் சிங் கூறியிருப்பதாவது:
லிங்கா படத்தில் நான் நடித்து வருவது உண்மைதான். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட கதையில் ரஜினியை எதிர்க்கும் ஜமீன்தார் கெட்அப்பிலான வில்லன் தேடியிருக்கிறார்கள்.
மகதீரா உள்ளிட்ட சில படங்களில் என்னை பார்த்து விட்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் என்னை தேர்வு செய்தார். ஒவ்வொரு நடிகனுக்கும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு அது எனக்கு நிறைவேறியிருக்கிறது.
மற்றவர்களை எப்படி புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை ரஜினி சாருடன் நடித்தபோது அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு படத்திலும் சாதனை படைக்கிறீர்கமிளே எப்படி என்று அவரிடம் கேட்டேன்.
ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படமாக நினைத்து வேலை செய்கிறேன் என்றார். இது அவரிடம் கற்ற இரண்டாவது பாடம். இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன் என்று நினைக்கிறேன். என்கிறார் தேவ் சிங்.
இதுகுறித்து தேவ் சிங் கூறியிருப்பதாவது:
லிங்கா படத்தில் நான் நடித்து வருவது உண்மைதான். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட கதையில் ரஜினியை எதிர்க்கும் ஜமீன்தார் கெட்அப்பிலான வில்லன் தேடியிருக்கிறார்கள்.
மகதீரா உள்ளிட்ட சில படங்களில் என்னை பார்த்து விட்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் என்னை தேர்வு செய்தார். ஒவ்வொரு நடிகனுக்கும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு அது எனக்கு நிறைவேறியிருக்கிறது.
மற்றவர்களை எப்படி புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை ரஜினி சாருடன் நடித்தபோது அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு படத்திலும் சாதனை படைக்கிறீர்கமிளே எப்படி என்று அவரிடம் கேட்டேன்.
ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படமாக நினைத்து வேலை செய்கிறேன் என்றார். இது அவரிடம் கற்ற இரண்டாவது பாடம். இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன் என்று நினைக்கிறேன். என்கிறார் தேவ் சிங்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...