Advertisement

Friday, June 13, 2014

அனுஷ்காவின் படங்கள் அமோக விற்பனை…!

தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை அனுஷ்கா காட்டில்தான் தற்போது அடை மழை பெய்து வருகிறது. ஒரே சமயத்தில் நான்கு பெரிய படங்களில் நடித்து வருகிறார்.
ராஜமௌலி இயக்கத்தில் ‘பாகுபலி’, குணசேகரன் இயக்கத்தில் ‘ருத்ரம்மா தேவி’ ஆகிய தெலுங்குப் படங்களிலும், கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி ஜோடியாக ‘லிங்கா’ படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் ஜோடியாக
பெயரிப்படாத படத்திலும் என தென்னிந்தியத் திரையுலகின் முக்கியமான படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார்.
இதில் தெலுங்கு, தமிழில் தயாராகும் படங்களான ‘ருத்ரம்மா தேவி, பாகுபலி’ ஆகிய இரண்டும் சரித்திரப் படங்கள். அதிலும் ‘ருத்ரம்மா தேவி’ படத்தில் அனுஷ்காதான் ராணியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்காக மட்டும் அனுஷ்காக அம்சமாக காட்டுவதற்காக சில பல கோடிகளை செலவு செய்திருக்கிறார்களாம். சில காட்சிகளல் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரிஜனல் தங்க நகைகளை அனுஷ்காவிற்கு அணிவித்து படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்திற்காக அனுஷ்காவின் உடைகளுக்கு மட்டுமே நிறைய செலவு செய்திருக்கிறார்களாம்.
இப்படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. அதே சமயம் படத்தின் வியாபாரமும் ஆரம்பமாகிவிட்டது. ஆந்திராவில் உள்ள ஏரியாக்களுக்கு இந்த படத்தை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறதாம்.
பிரபல தயாரிப்பாளர் ஒருவர் முக்கியமான இரண்டு ஏரியாக்களை அதிக விலை கொடுத்து வாங்கி படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி விட்டாராம். மற்ற ஏரியாக்களுக்கும் அதிக விலை போகும் என்கிறார்கள். அனுஷ்கா படத்திற்கு ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வியாபாரம் நடக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...