ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கோலிசோடா விஜய்மில்டன் இயக்கும் படத்தில்
தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் விக்ரம். இந்த படத்திற்கு
முருகதாஸிடம் அட்வான்ஸ் வாங்கும்போது, உங்கள் இயக்கத்திலும் சீக்கிரமே
நான் நடிக்கனும் என்றொரு விண்ணத்தை அட்வான்சை கைப்பற்றியபடியே வைத்தாராம்
விக்ரம்.
அதற்கு முருகதாஸ்தரப்பில் விக்ரம் எதிர்பார்த்த பதில் வரவில்லையாம். பார்க்கலாம். எல்லாவற்றையும் காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஒத்த வார்த்தையில்
கூறி சீயானை அனுப்பி விட்டாராம்.
ஆனால், அப்படி முருகதாஸ் சொன்னதற்கு பின்னாடி ஒரு பெரிய ப்ளாஸ்பேக் உள்ளதாம். அதாவது, சூர்யா நடித்த கஜினி படத்தின் கதையை ஆஸ்கர் பிலிம்சிடம் ஓ.கே செய்த ஏ.ஆர்.முருகதாஸ் அதையடுத்து விக்ரமிடம் கதை சொல்லுமாறு அவர்கள் சொன்னதும், அவரை தேடிச்சென்று கதையை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
ஆனால், அந்த கதை விக்ரமிற்கு பிடித்து விட்டபோதும், பார்க்க சின்ன பையனாட்டம் இருக்கும் முருகதாஸ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையாம். அதனால் தனது மனதில் பட்டதை ஆஸ்கர் பிலிம்சிடம் சொல்லி விட்டாராம். அதன்காரணமாக, அந்த படத்தை தயாரிக்கும் முயற்சியையும கைவிட்டதாம் ஆஸ்கர் பிலிம்ஸ்.
இப்படி விக்ரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால் அப்போது கஜினி படமே நிறுத்தப்பட்டதாம். அதன்பிறகுதான் சூர்யாவிடம் அந்த கதையை சொல்லி, படத்தை ஹிட்டாக கொடுத்த முருகதாஸ், அதே கதையை தெலுங்கு. இந்தி என பல மொழிகளிலும் மாறி மாறி இயக்கி தொடர்ந்து ஹிட் கொடுத்தார்.
ஆக இதுதான் முன்பு நடந்திருக்கிறது. இருப்பினும் தனது தயாரிப்பில் விக்ரமுக்கு ஒரு படம் கொடுத்துள்ளார் முருகதாஸ்.
அதேபோல் விக்ரமும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து மீண்டும் முருகதாசுக்கு கால்சீட் கொடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் எனறு ஆசைப்படுகிறார். எப்படியோ முருகதாஸ் சொன்னது போல், இதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும்.
அதற்கு முருகதாஸ்தரப்பில் விக்ரம் எதிர்பார்த்த பதில் வரவில்லையாம். பார்க்கலாம். எல்லாவற்றையும் காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஒத்த வார்த்தையில்
கூறி சீயானை அனுப்பி விட்டாராம்.
ஆனால், அப்படி முருகதாஸ் சொன்னதற்கு பின்னாடி ஒரு பெரிய ப்ளாஸ்பேக் உள்ளதாம். அதாவது, சூர்யா நடித்த கஜினி படத்தின் கதையை ஆஸ்கர் பிலிம்சிடம் ஓ.கே செய்த ஏ.ஆர்.முருகதாஸ் அதையடுத்து விக்ரமிடம் கதை சொல்லுமாறு அவர்கள் சொன்னதும், அவரை தேடிச்சென்று கதையை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
ஆனால், அந்த கதை விக்ரமிற்கு பிடித்து விட்டபோதும், பார்க்க சின்ன பையனாட்டம் இருக்கும் முருகதாஸ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையாம். அதனால் தனது மனதில் பட்டதை ஆஸ்கர் பிலிம்சிடம் சொல்லி விட்டாராம். அதன்காரணமாக, அந்த படத்தை தயாரிக்கும் முயற்சியையும கைவிட்டதாம் ஆஸ்கர் பிலிம்ஸ்.
இப்படி விக்ரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால் அப்போது கஜினி படமே நிறுத்தப்பட்டதாம். அதன்பிறகுதான் சூர்யாவிடம் அந்த கதையை சொல்லி, படத்தை ஹிட்டாக கொடுத்த முருகதாஸ், அதே கதையை தெலுங்கு. இந்தி என பல மொழிகளிலும் மாறி மாறி இயக்கி தொடர்ந்து ஹிட் கொடுத்தார்.
ஆக இதுதான் முன்பு நடந்திருக்கிறது. இருப்பினும் தனது தயாரிப்பில் விக்ரமுக்கு ஒரு படம் கொடுத்துள்ளார் முருகதாஸ்.
அதேபோல் விக்ரமும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து மீண்டும் முருகதாசுக்கு கால்சீட் கொடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் எனறு ஆசைப்படுகிறார். எப்படியோ முருகதாஸ் சொன்னது போல், இதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...