Advertisement

Saturday, June 14, 2014

யாமிருக்க பயமே பாகம் – 2 தயாரகிறது?

கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில், கடந்த மாதம் வெளியாகி, 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது -யாமிருக்க பயமே. இப்படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் டி கே. இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரிய லாபத்தைக் கொடுத்திருக்கும் யாமிருக்க பயமே படம் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.

இந்நிலையில், யாமிருக்க பயமே படத்தின் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் டி கே. இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகையர், டெக்னீஷியன்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இது பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார் டி.கே.
ஹாரர் படங்களைப் பொறுத்தவரை முதல் பாகம் வெற்றியடைந்தால் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் ஹாலிவுட் தொடங்கி எல்லா வுட்களிலும் வெளிவருவது வழக்கமானதுதான்.
இந்தவரிசையில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் – இயக்குநர் டி கே மீண்டும் இணையவிருக்கும் புதிய படமும் யாமிருக்க பயமே படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...