நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார் கேரளத்து நஸ்ரியா, ராஜா ராணி,
நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் என சில படங்களில் நடித்து விட்டு
விடைபெறுகிறார். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு
செட்டிலாகப்போகிறார்.
ஆனால் மலேசியாவில்
இருந்து இன்னொரு நஸ்ரியா தமிழ் சினிமாவுக்கு வருகிறார். தமிழ் மற்றும் மலேசிய கலைஞர்கள் இணைந்து தயாரிக்கும், ‘முத்துக்குமார் வாண்டட்’ என்ற படத்தின் மூலம் புது நஸ்ரியா வருகிறார்.
திருமணத்துக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் முத்துக்குமாரை தேடி மலேசியாவுக்கு செல்கிறார் நஸ்ரியா. முத்துக்குமார் அவளது காதலனும் இல்லை. நண்பனும் இல்லை, உறவினரும் இல்லை பிறகு ஏன் முத்துக்குமாரை தேடிச் செல்கிறார். முத்துகுமாருக்கும் அவருக்கும் என்ன உறவு என்பதை சொல்லும் படம்.
நஸ்ரியாவுக்கு ஜோடியாக சரவணன் என்ற மலேசிய தமிழர் நடிக்கிறார். இவர்கள் தவிர நிழல்கள்ரவி, பாத்திமா பாபு, ஜெயமணி ஆகியோரும் நடிக்கிறார்கள். எம்.பத்மநாபன் என்பவர் இயக்குகிறார். சென்னை மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடக்கிறது.
கேரளத்து நஸ்ரியா இடத்தை மலேசிய நஸ்ரியா பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனால் மலேசியாவில்
இருந்து இன்னொரு நஸ்ரியா தமிழ் சினிமாவுக்கு வருகிறார். தமிழ் மற்றும் மலேசிய கலைஞர்கள் இணைந்து தயாரிக்கும், ‘முத்துக்குமார் வாண்டட்’ என்ற படத்தின் மூலம் புது நஸ்ரியா வருகிறார்.
திருமணத்துக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் முத்துக்குமாரை தேடி மலேசியாவுக்கு செல்கிறார் நஸ்ரியா. முத்துக்குமார் அவளது காதலனும் இல்லை. நண்பனும் இல்லை, உறவினரும் இல்லை பிறகு ஏன் முத்துக்குமாரை தேடிச் செல்கிறார். முத்துகுமாருக்கும் அவருக்கும் என்ன உறவு என்பதை சொல்லும் படம்.
நஸ்ரியாவுக்கு ஜோடியாக சரவணன் என்ற மலேசிய தமிழர் நடிக்கிறார். இவர்கள் தவிர நிழல்கள்ரவி, பாத்திமா பாபு, ஜெயமணி ஆகியோரும் நடிக்கிறார்கள். எம்.பத்மநாபன் என்பவர் இயக்குகிறார். சென்னை மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடக்கிறது.
கேரளத்து நஸ்ரியா இடத்தை மலேசிய நஸ்ரியா பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...