Advertisement

Saturday, June 14, 2014

சூர்யாவின் மானேஜர் மீது மிரட்டல் புகார்

புதுமுக இயக்குனர் முருகராஜா சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். இந்தப் படம் நடிகர் சூர்யாவை குறிக்கிறது. அவரது இயற்பெயர் சரவணன்.
எனவே இந்தப் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சூர்யா தரப்பு கூறியது. தயாரிப்பாளர் சங்கமும் சூர்யாவிடம் அனுமதி கடிதம் வாங்கி வந்தால்தான் பெயரை பதிவு செய்வோம் என்று கூறிவிட்டது. இந்த நிலையில் சூர்யாவின் மானேஜர் ராஜசேகர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான்
சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வருகிறேன். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திலும் பணியாற்றி இருக்கிறேன். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை தயாரித்திருக்கிறேன்.
இந்தப் படத்தின் தலைப்பில் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் தலையீடு இருப்பதால் பதிவு செய்ய மறுத்தனர். சூர்யாவின் மானேஜர் ராஜசேகர் என்னை தினமும் தொலைபேசியில் மிரட்டி வருகிறார். எனவே தயாரிப்பாளர் சங்கம் மீதும், ராஜசேகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜசேகர் கூறும்போது “நான் யாரையும் மிரட்டவில்லை அவர்தான் விளம்பரத்திற்காக தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
படத்தின் தலைப்பு சூர்யாவை நேரடியாக குறிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுகுறித்து 8 மாதங்களுக்கு முன்பே அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார். (அருகில் உள்ள படத்தில் முருகராஜ் ஹீரோயினுடன் உள்ளார்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...