Advertisement

Saturday, June 14, 2014

வீட்டு பணியாளர்களுக்கு சொந்த வீடு கட்டி முடித்த அஜீத்! – விரைவில் கிரஹபிரவேசம்

தல அஜீத் எப்போதும் தனக்கென தனி பாணி போட்டு நடப்பவர். சொந்த கடனால் துவண்டு போய் கிடந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளராக்கி கடனை அடைக்க வைத்தார்.
அடுத்த படத்தையும் தயாரிக்க கொடுத்திருக்கிறார். இத்தனைக்கும் ஏ.எம்.ரத்னம் அஜீத்தை வைத்து படம் எதுவும் எடுக்கவில்லை. தொடர் தோல்விகளாலும், பணப் பிரச்னையாலும் சிலரது நம்பிக்கை துரோகத்தாலும் தவித்து நின்ற கவுதம் மேனனை வலிந்து அழைத்து அடுத்து நாம சேர்ந்து படம் பண்ணுவோம் என்று சொன்னார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
வளரும் ஹீரோக்கள்,
தனக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஹீரோக்களின் படப்பிடிப்புக்கு சென்று அவர்களை வாழ்த்திவிட்டு வருவார். தனது சொந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்குகூட வராதவர் பொது பிரச்னைக்காக திரையுலம் போராடும்போது முதல் ஆளாக வந்து முதல் வரிசையில் நிற்பார்.
அது கால் முறிந்து கட்டுப்போட்டிருந்தாலும் சரி. முக்கியமான ஆபரேஷன் செய்ய வேண்டியது இருந்தும் அதனை தள்ளிப்போட்டுக்கொண்டே அடுத்தடுத்த படங்கிகளில் நடிப்பார். சொந்த செலவில் மன்றம் நடத்தும் நடிகர்கள் இருக்கும் காலத்தில் தன் ரசிகர் மன்றத்தையே துணிச்சலாக கலைத்த முதல் ஹீரோ.
இப்படி தலயின் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இப்போது அந்த வரிசையில் வருகிறது. அவர் தன் வீட்டு பணியாளர்களுக்கு சொந்த வீடு கட்டிக் கொடுத்திருப்பது.
தன் வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் தன் வீட்டில் பணிபுரியம் 12 தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். இதன் பூமி பூஜையில் ஷாலினி மற்றும் குழந்தையுடன் கலந்து கொண்டார்.
இப்போது வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அஜீத் தற்போது மலேசியாவில் இருக்கிறார். அவர் திரும்பி வந்ததும் கிரஹபிரவேசம் நடக்க இருக்கிறது. அதில் அஜீத் குடும்பத்துடன் கலந்து கொண்டு பணியாளர்களிடம் வீட்டை முறைப்படி ஒப்படைக்கிறார் அஜீத்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...