Advertisement

Friday, June 13, 2014

சிம்பு- நயன்? அஞ்சலி - மு.களஞ்சியம்?

கும்பகோணத்திலிருக்கிறார்கள் சிம்புவும் நயன்தாராவும்.
இது கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட ‘இது நம்ம ஆளு’ பட ஷுட்டிங்குக்காக. பிரச்சனைகள் ஓய்ந்து எல்லா தரப்பும் நிம்மதியான பின் நடக்கிற ஷுட்டிங் அவ்லவா? இதுவரை இருந்த இறுக்கமெல்லாம் ஓடியே போச் என்கிறார்கள் யூனிட்டிலிருந்து. முன்பு எலியும் பொறியும் போல கடுகடு நிமிடமாகி நகர்ந்து கொண்டிருந்த நயன்-சிம்பு நட்பு
இந்த முறை ஒரே கலகலப்புதானாம்.

அப்படியே தன் வேலையை நைசாக காட்ட ட்ரை பண்ணுகிறாராம் சிம்பு. கும்பகோணத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருக்கிறது மயிலாடுதுறை. இதுதான் அவரது அப்பாவுடைய ஊர். சொந்த வீடு, உற்றார் உறவுகள் என்று அத்தனை பேரும் அங்கிருக்க, ‘ஒரு முறை வீட்டுக்கு போயிட்டு வரலாமா?’ என்று நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறாராம் வம்பு.

இவர்கள் சேர்ந்து பிடிக்கலையா? அல்லது சேர்ந்ததால் வந்த பொறாமையா? தெரியாது. மு.களஞ்சியமும் இந்த ஜோடியை உதாரணம் காட்டி ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார். சிம்பு- நயன்தாரா ரெண்டு பேரும் லவ் பண்ணினாங்க. அப்புறம் பிரிஞ்சுட்டாங்க. இருந்தாலும் படத்தில நடிக்க கூப்பிட்டப்போ சேர்ந்து நடிக்கிறாங்க. அந்த மாதிரிதான் எல்லாமே. பர்சனல் வாழ்க்கைய சினிமாவோட சேர்த்து குழப்பக்கூடாது என்று கூறியிருக்கிறார் அவர். இதன் மூலம் அவர் சொல்லவருவது? அஞ்சலிக்கும் தனக்கும் அப்படியொன்று இருந்திச்சு என்பதையா?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...