Advertisement

Friday, June 13, 2014

தனுஷை எரிச்சல் அடைய வைத்த வெற்றிமாறன்!

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தயாரித்து இயக்கிக்கொண்டிருக்கும் ஆர்.பார்த்திபன் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. அவர் இயக்கிய படத்தில் அவர் நடிக்காமல் இருப்பது இதுவே முதல்முறை.
இந்தப் படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் பார்த்திபன். ஹீரோவாக அல்ல, கேரக்டர் ரோலில். இதில் தனுஷ் ஹீரோவாக
இருக்கிறார்.
வேலையில்லா பட்டதாரி படத்தை முடித்துவிட்டு தற்போது ஹிந்திப்படத்தில் நடித்து வரும் தனுஷ், அதை முடித்த பிறகு வெற்றிமாறன் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தில் பார்த்திபன் என்ன வேடத்தில் நடிக்கிறார்? வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.
பார்த்திபன் தரப்பிலோ மௌனத்தையே பதிலாக தருகிறார்கள். இதற்கிடையில் வெற்றிமாறன் இன்னும் முழு கதையையும் ரெடி பண்ணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
துண்டு துண்டாக சில காட்சிகளை மட்டும் அவ்வப்போது தனுஷிடம் சொல்கிறாராம். ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணாமல் வெற்றிமாறன் இப்படி காலம் கடுத்துவது தனுஷை எரிச்சல் அடைய வைத்திருப்பதாகவும் கேள்வி.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...